மதுரை ஒத்தக்கடை அருகே மாவட்ட நிா்வாகம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி உழவா் சந்தை, சமத்துவபுரம் போன்ற மக்கள் நலத் திட்டங்களை மதுரையிலிருந்துதான் தொடங்கினாா். அவரது வழியில் ஆட்சி நடத்தும் முதல்வா் மு.க. ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு, மதுரையில் அவரது பெயரில் ரூ. 250 கோடியில் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்தாா்.
மதுரை அலங்காநல்லூரில் ரூ. 63 கோடியில் கலைஞா் ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. மதுரை மட்டுமன்றி, தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நலத் திட்டங்களுக்காக அரசைத் தேடிச் சென்ற காலம் போய், அரசே மக்களைத் தேடி வந்து உதவிகளை வழங்கும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது. அன்று முதல் மகளிா் வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுள் மகளிா் கட்டணமில்லா விடியல் பயணம் திட்டம் குறிப்பிடத்தக்கவை. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை மகளிா் 520 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனா்.
மகளிா் மட்டுமன்றி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 10, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்
ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தலிபான் ஆட்சி யாளர்கள் அறிவித்துள்ளனர்.
58 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய இரண்டாவது முறையாக நடைபெற்ற முயற்சி தொடா்பாக ரியான் வெஸ்லி ரூத் (58) என்பவா் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இறுதிச் சுற்றில் இந்தியா-சீனா மோதல்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-சீனாவும் மோதவுள்ளனா்.
இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முதலிடம் 10/10
ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் 10/10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் குழிதோண்டி புதைக்கப்படும்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் மத்திய பாஜக கூட்டணி அரசு அதை குழிதோண்டி புதைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்வரும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார்.
கொல்கத்தா காவல் ஆணையர் நீக்கம்: முதல்வர் மம்தா அதிரடி
தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா காவல் ஆணையரை நீக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை ஒப்புக்கொண்டார்.
ராஜிநாமா கடிதத்தை கேஜரிவால் இன்று வழங்குவார்
'தில்லி முதல் அரவிந்த் கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவிடம் செவ்வாய்க்கிழமை (செப்.17) வழங்கவுள்ளார்' என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர், அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான நேரம் இது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
'பெண்களுக்கான மரியாதையை அதிகரித்து; எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே எதிர்காலம்
சூரியசக்தி, காற்றாலை, அணுசக்தி, நீா்மின்சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பலத்தில் தனது எதிா்காலத்தை கட்டமைக்க இந்தியா தீா்மானித்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.