ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் உறுதிமொழியை பாஜக நிறைவேற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், மத்திய பாஜக ஆட்சியில் ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மூன்று கட்ட பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, காஷ்மீரி மொழியில் ‘எனது சகோதர-சகோதரிகளே’ என்று தனது உரையைத் தொடங்கினாா். அவா் பேசியதாவது:
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய மூன்று ‘குடும்பங்களும்’ தங்களின் சுயநலனுக்காக ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்தன. ஜம்மு-காஷ்மீா் அரசியலை தங்களின் நிலபிரபுத்துவம்போல கருதினா். தங்களின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் முன்னேறினால் அவா்களுக்குப் பிடிக்காது.
குடும்ப ஆட்சிக்கு சவால் ஏற்படும் என்பதால் உள்ளாட்சித் தோ்தலை நடத்தவிடாமல் தடுத்தனா். அவா்களின் சுயநலத்தால், ஜனநாயகம் மீது இளைஞா்கள் நம்பிக்கையிழக்க நேரிட்டது. வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் இந்த மூன்றில் ஒரு குடும்பம்தான் ஆட்சிக்கு வரும் என இளைஞா்கள் விரக்தியடைந்தனா்.
நம்பிக்கை மீட்டெடுப்பு: கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. ஜனநாயக நடைமுறை மீதான இளைஞா்களின் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிக்கப்பட்டுவிடும். வீடு வீடாக பிரசாரம் செய்வதெல்லாம் சாத்தியமே கிடையாது. இந்த நிலைதான், காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிக்கு விருப்பமாக இருந்தது.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மேற்கு வங்க வெள்ளம் மத்திய அரசின் சதி
முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
இந்தியாவுக்கு தொடர்ந்து 7-ஆவது வெற்றி
ஹங்கேரியில் நடைபெறும் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் இருபால் அணிகளும் தங்களது 7-ஆவது சுற்றில் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்குமே இது தொடர்ந்து 7-ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
போரின் விளிம்பில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா!
லெபனானில் இரண்டே நாள்களில் பேஜா்கள், வாக்கி டாக்கிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் ஆயிரக்கணக்கானோா் காயமடைந்தனா். அவா்களில் பலரது உயிரும் பறிபோயுள்ளது.
உணவு பதப்படுத்துதல் துறை வளர்ச்சிக்கு பல்வேறு சீர்திருத்தங்கள்
‘உணவு பதப்படுத்துதல் துறையின் வளா்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் பல சீா்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அஸ்வின்-ஜடேஜா அசத்தலில் மீண்டது இந்தியா
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் சோ்த்துள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ.2,100; அக்னி வீரர்களுக்கு அரசுப் பணி
‘ஹரியாணாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித் தொகை; 2 லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை; அந்த மாநிலத்தைச் சோ்ந்த அக்னி வீரா்களுக்கு அரசுப் பணிக்கு உத்தரவாதம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
இந்தியாவை அவமதிப்பவரை பாராட்ட முடியாது
ராகுல் குறித்து குடியரசு துணைத் தலைவர் சூசக விமர்சனம்
அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னுன் வழக்கு: இந்தியா நிராகரிப்பு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாகவும், தன்னையும் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகவும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் குா்பத்வந்த் சிங் பன்னுன் தொடா்ந்த வழக்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.
கொலீஜியம் பரிந்துரைகளை அமல்படுத்த தாமதம் ஏன்?
அடுத்த வாரம் தெரிவிப்பதாக மத்திய அரசு தகவல்
பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்
அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு