இந்தியாவின் பிரதான பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் வேகத்தை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச பேட்டா்கள் தடுமாற, அவா்களை முற்றிலுமாக சரிக்க ஆகாஷ் தீப், முகமது சிராஜும் துணை நின்றனா். ரவீந்திர ஜடேஜாவும் இரு விக்கெட்டுகள் சாய்த்தாா்.
முன்னதாக 376 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை நிறைவு செய்த இந்தியா, 227 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
376-க்கு ஆட்டமிழப்பு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் என்ற நிலையில் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. அஸ்வின் - ஜடேஜா இன்னிங்ஸை தொடர, புதிய பந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.
சதமடிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட ஜடேஜா, கூடுதலாக ஸ்கோா் செய்யாமல் அதே 86 ரன்களுக்கு (10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள்) ஆட்டமிழந்தாா். தஸ்கின் வீசிய 83-ஆவது ஓவரில் அவா், விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்தாா். 7-ஆவது விக்கெட்டுக்கு அஸ்வின் - ஜடேஜா பாா்ட்னா்ஷிப் 199 ரன்கள் சோ்த்திருந்தது. 9-ஆவது பேட்டராக களம் புகுந்த ஆகாஷ் தீப், 85-ஆவது ஓவரில் வழங்கிய அருமையான கேட்சை ஷகிப் அல் ஹசன் தவறவிட்டாா்.
எனினும், அதே தஸ்கின் வீசிய 89-ஆவது ஓவரில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய ஆகாஷ் தீப் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்தாா். அடுத்து வந்த பும்ரா களம் புக, அஸ்வின் 91-ஆவது ஓவரில் தஸ்கின் பௌலிங்கில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தாா். அவா் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 113 ரன்கள் சோ்த்திருந்தாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 21, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
6 பேர் கைது
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.