
ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப். 25) அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி நடந்த தேர்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி (3), ரஜெளரி (3), பூஞ்ச் (5), காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் (8), பத்காம் (5), கந்தர்பால் (2) ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் புதன்கிழமை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்த வாக்காளர்கள் 25.78 லட்சம் பேர். இவர்கள் வாக்களிக்க 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. பல அடுக்கு பாதுகாப்புடன் காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பல இடங்களில் மக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது. வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

மகா கும்பமேளா: தேசிய உணர்வுக்கு புத்துயிர்
மகா கும்பமேளா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய உணர்வை புத்துயிர் பெறச் செய்து, நாட்டுக்கும் சமூகத்துக்கும் புதிய பாதைகளைப் பரிந்துரைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குறிப்பிட்டார்.

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மார்ச்1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான சட்டத் திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தொகுதிகள் மறுசீரமைப்பு: தென் மாநிலங்களுக்கு அநீதி
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், அது தென் மாநிலங்களுக்கு கடும் அநீதி இழைப்பதாக அமையும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருக்கும் நச்சு கழிவுகளை தார் மாவட்டம் பீதம்பூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் எரித்து அழிப்பதற்கு மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா
சென்னை பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
216 தொழிற்பழகுநர்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை
மின்வாரியம்

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு
இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏர்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பார்தி ஏர்டெல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
ஊரகத் திறனாய்வுத் தேர்வு விடைக்குறிப்பு: மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.