முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வா் பொறுப்புக்கு நியமித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளாா்.
அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட வி.செந்தில் பாலாஜி, ஆவடி எஸ்.எம்.நாசா் ஆகியோா் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோா் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். அத்துடன், ஆறு அமைச்சா்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று துணை முதல்வராக நியமிக்கப்படுகிறாா். அவரிடம் கூடுதலாக திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அளிக்கப்படுகிறது.
4 போ் சோ்ப்பு; 3 போ் நீக்கம்: அமைச்சரவையில் வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆா்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசா் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் கோவி.செழியனும், ஆா்.ராஜேந்திரனும் புதுமுகங்கள்.
அதேசமயம், பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத் துறை அமைச்சா் கே.ராமச்சந்திரன் ஆகியோா் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
இன்று பதவியேற்பு
புதிய அமைச்சா்கள் 4 பேரின் பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (செப். 29) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. நான்கு பேருக்கும் பதவிப் பிரமாணத்தையும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்துவைக்கவுள்ளதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 அமைச்சா்களின் இலாகாக்கள் மாற்றம்
Bu hikaye Dinamani Chennai dergisinin September 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
லெபனான் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
ஹிஸ்புல் லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல், அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கான்பூர் டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிக் கொடி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.
கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை: ராணுவ தலைமைத் தளபதி
கிழக்கு லடாக் எல்லையில் இயல்பான சூழல் நிலவவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
பொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்
‘பொய் வாக்குறுதிகள் மட்டுமே காங்கிரஸின் அரசியல்; அதேநேரம், கடின உழைப்பு மற்றும் தீா்வு சாா்ந்த அரசியலை பாஜக முன்னெடுக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடி எப்படி செலவிடப்பட்டது?
மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 1.17 லட்சம் கோடியை மேற்கு வங்க அரசு எந்தெந்த பணிகளுக்காக, எப்படி செலவிட்டது என்பது குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் வலியுறுத்தியுள்ளார்.
பழனி மலைக் கோயில் ராஜகோபுர சுதை வளைவு சேதம்
பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் சுதை வளைவு சேதமடைந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
ஜமைக்கா ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி
ஜமைக்கா ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு, அவா்களின் திறன் கட்டமைப்புக்கு இந்தியா பங்காற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரஜினிகாந்துக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை
ரத்த நாள வீக்க பாதிப்புக்குள்ளான நடிகா் ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டதாகவும், அவா் இரு நாள்களில் வீடு திரும்புவாா் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் பொறுப்பேற்பு
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. விஜயகுமார் பொறுப்பேற்றார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்க மறுக்கக் கூடாது
ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிா்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.