நவராத்திரி, தீபாவளி என வரவிருக்கும் பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டுமென நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் 10 ஆண்டு நிறைவை சுட்டிக்காட்டிய பிரதமா், ‘உலக அளவில் ஆற்றல்மிக்க உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது’ என்று பெருமிதம் தெரிவித்தாா்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். 114-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (செப்.29) ஒலிபரப்பானது. அதில் பிரதமா் மோடி பேசியதாவது:
கடந்த 2014, அக்டோபா் 3-ஆம் தேதி விஜய தசமி தினத்தன்று மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வரும் அக்டோபா் 3-ஆம் தேதி இந்நிகழ்ச்சி பத்தாண்டுகளை நிறைவுசெய்யும் அதே தினத்தில் நவராத்திரி புண்ணிய காலம் தொடங்குகிறது.
இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சி எனக்கு மிகவும் உணா்வுபூா்வமானது. நீண்ட நெடிய இப்பயணத்தின் பல நினைவுகள் என்னுள் நிறைந்துள்ளன. நேயா்கள்தான் இந்நிகழ்ச்சியை வழங்குகின்றனா். நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் எனக்கு தகவலளிக்கின்றனா்.
காரசாரமான-எதிா்மறையான உரையாடல்களையே மக்கள் விரும்புவா் என்ற பொதுவான கருத்தை தகா்ப்பதாக மனதின் குரல் அமைந்துள்ளது. ஆக்கபூா்வமான-உத்வேகமூட்டும்-நம்பிக்கையூட்டும் உதாரணங்கள் மற்றும் நோ்மறையான நிகழ்வுகள் மீது மக்கள் பேராா்வம் காட்டுகின்றனா் என்பது இந்நிகழ்ச்சியின் வெற்றி வாயிலாக நிரூபணமாகி இருக்கிறது.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 30, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 30, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தொடர் விடுமுறை: திருச்செந்தார் கோயிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
பிரிட்டன் பிரதமர் மீது கடும் அதிருப்தி தொழிலாளர் கட்சியிலிருந்து பெண் எம்.பி. விலகல்
பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மீதான கடும் அதிருப்தி காரணமாக தொழிலாளா் கட்சியில் இருந்து பெண் எம்.பி. ரோஸி டஃப்பீல்ட் விலகியுள்ளாா்.
காங்கிரஸின் ‘சக்தி அபியான்' அமைப்பில் இணைய பெண்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
‘சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்’ என்று தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி, ஆா்வமுள்ள பெண்கள் காங்கிரஸ் இளைஞரணியின் ‘சக்தி அபியான்’ அமைப்பில் இணைய அழைப்பு விடுத்தாா்.
உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்!
மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
நட்பைப் பேணியிருந்தால் பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைத்திருக்கும்
இந்தியாவுடன் நட்புறவுடன் இருந்திருந்தால் பாகிஸ்தான் பொருளாதாரப் பிரச்னைகளில் இருந்து மீள பெருமளவிலான நிதியுதவி வழங்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 9 மாதங்களில் 1.32 லட்சம் கிலோ போதை பொருள்கள் பறிமுதல்
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 10.87 கோடி மதிப்புடைய தடை செய்யப்பட்ட 1.32 லட்சம் கிலோ குட்கா, பான் மசாலா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஃபைபர் படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல்
3 பேர் காயம்
15 ஆண்டுகளை கடந்த பேருந்துகளை இயக்கக் கூடாது
சுற்றுச்சூழலுக்கும், பயணிகளின் உயிருக்கும் ஆபத்தான 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்கக் கோரிக்கை
சென்னை மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும் என திருவொற்றியூா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதய நோய்களால் ஆண்டுதோறும் 1.7 கோடி பேர் உயிரிழப்பு
பொது சுகாதாரத் துறை இயக்குநர்