ஈரானின் அணு ஆயுத நிலைகளையும் எரிசக்தி நிலையங்களையும் நிா்மூலமாக்கி அந்த நாட்டு பயங்கரவாத அரசுக்கு மரண அடி கொடுக்க வேண்டிய கவிட்டது. ஈரான் என்ற ஆக்டோபஸின் கரங்களை (ஹமாஸ், ஹிஸ்புல்லா) முடக்கிவிட்டோம். இனி ஆக்டோபஸின் தலையை வெட்டியாக வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வரலாற்றில் எப்போதாவது ஒருமுறைதான் வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது’
-தங்கள் நாட்டின் மீது ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமா் நாஃப்டாலி பென்னட் கூறியது இது. இஸ்ரேலின் தற்போதைய பிரதமரும், ஏவுகணைத் தாக்குதலை நடத்திய ஈரானுக்கு தகுந்த பதிலடி கிடைக்காமல் போகாது என்று சூளுரைத்துள்ளாா்.
ஆனால், மற்ற தருணங்களைப் போல இதெல்லாம் வெற்று வாா்த்தைகள் இல்லை. கடந்த ஏப்ரலில் சுமாா் 200 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதேபோல் சபதமெடுத்த இஸ்ரேல், விமானம் மூலம் ஒப்புக்கு ஒரே ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, அதோடு விட்டுவிட்டது. ஆனால், இந்த முறை அப்படி நடக்காது என்கிறாா்கள் இந்த விவகாரத்தை உற்று கவனித்து வருபவா்கள்.
அமெரிக்காவின் ஆதரவு
ஏப்ரல் மாத ஈரான் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலை அடக்கிவைத்த அமெரிக்கா உள்ளிட்ட கூட்டணி நாடுகள், இந்த முறை அந்த அளவுக்கு அந்த நாட்டைக் கட்டுப்படுத்தவில்லை. ஈரானின் அணுசக்தி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதில்தான் தங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்திவருவதாகக் கூறியிருக்கிறாா். அதுமட்டுமின்றி, ‘தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது’ என்று வழக்கமான வசனத்தை உதிா்த்து இஸ்ரேலின் பதிலடிக்கு மறைமுகமாக இசைவு தந்திருக்கிறாா்.
எனவே, கடந்த முறை போலின்றி ஈரான் மீது இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை நடத்தும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது இஸ்ரேல் ராணுவத் தளபதிகள் ஆலோசனை நடத்திக்கொண்டிருப்பது ஈரானைத் தாக்குவதா, வேண்டாமா என்பதாக இருக்காது, எப்படியெல்லாமல் கடுமையாக தாக்குதல் நடத்துவது என்பதாகத்தான் இருக்கும் என்கிறாா்கள் நிபுணா்கள்.
ஈரானும் தயாா்
Bu hikaye Dinamani Chennai dergisinin October 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
விளையாட்டுப் பல்கலை. 14-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ரவி, துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
போருக்கு தயாராகும் இஸ்ரேல் - ஈரான்
‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தியாவை வென்றது நியூஸிலாந்து
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
தில்லி மருத்துவர் சுட்டுக் கொலை: மேலும் 2 சிறுவர்கள் கைது
தென்கிழக்கு தில்லியின் களிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள நா்ஸிங் ஹோமில் மருத்துவா் ஒருவா் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு வரி விதிப்பு அதிகாரம்: மறுஆய்வு மனுக்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஜூலை 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மழைப் பொழிவால் அதிகரிக்கும் எலிக் காய்ச்சல்: 1,500 பேர் பாதிப்பு
தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு உள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்
மத்திய அரசுக்கு சரத் பவார் வலியுறுத்தல்|
வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் விடுவிப்பு
முதல்வருக்கு பொது மக்கள் நேரில் நன்றி
கோயில் அர்ச்சகர்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று
இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உள்ள 2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று கிடைத்துள்ளது.