தற்சார்பு கிராமங்கள் எப்போது சாத்தியம்?
Dinamani Chennai|November 07, 2024
இந்தியாவில் வாழும் 142 கோடி பேரில், சுமார் 82 கோடி பேர் குடிநீர், உணவுக்கு பெரும் போராட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த 82 கோடி பேருக்குத்தான் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இலவச அரிசித் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு. இவர்களின் வாழ்க்கை மேம்படாமல் இந்தியா ஒரு நாளும் முன்னேற்றமடையாது.
கட்டுரையாளர்: பேராசிரியர்.

கிராமங்களைச் சேர்ந்த மனிதர்களிடம் உரையாடினால், ஏதோ ஒரு சலிப்பு, வெறுப்பு, இயலாமை, நம்பிக்கையற்ற தன்மை, அச்ச உணர்வு என பல உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். கிராம வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்து நகரங்களுக்குள் வந்து பணி செய்வோர் வாழ்க்கை சிறப்பானதாக அமையவில்லை என்பதை அவர்களின் புலம்பலில் நாம் காணமுடியும்.

சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளைத் தாண்டியும் ஏழைகளின் வாழ்வு ஏன் ஏற்றம் பெறவில்லை என்று எண்ணும்போது நம் அரசு யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி எழுவது நியாயம்தான். உலகம் வியக்கும் வகையில் நம் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் போட்டி போட்டு வளரும்போது ஏழைகளின் வாழ்வில் மட்டும் ஏன் ஏற்றத்தைக் கொண்டுவர அரசால் முடியவில்லை?

அரசு செயல்படாமல் இந்த வியத்தகு பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. ஏன் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவர முடிந்த அரசுக்கு, ஏழை மக்களுக்கான மேம்பாட்டைக் கொண்டுவர இயலவில்லை?

பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளை அரசு உருவாக்குகிறது. அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்குகிறது. இயற்கை வளத்தையும், மனிதவளத்தையும், தொழில்நுட்பங்களையும், அரசு உருவாக்கிய கொள்கைகளையும் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களும், சந்தை நிறுவனங்களும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

அதே அரசுதான் மக்களின் மேம்பாட்டுக்கான கொள்கைகளையும், திட்டங்களையும் கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குகிறது. அந்தக் கொள்கைகளையும், திட்டங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பயன்படுத்தி பெரும்பான்மை மக்கள் தங்கள் வறுமையைப் போக்கிக்கொள்ள முடியவில்லை; வாழ்க்கையை செழுமைப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

ஒட்டுமொத்தமாக மக்கள் முன்னேறவில்லை என்று கூறமுடியாது. சந்தைக்குள் பங்காளராகச் சென்றவர்கள், பணியாளர்களாகச் சென்றவர்கள், அரசு அதிகாரியாக- அலுவலராக - அரசியல் கட்சிகளுக்குள் சென்றவர்கள் என இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை வளமையாக்கிக்கொண்டார்கள். நகர்ப்புறத்துக்கு வணிகத்துக்காக சென்றவர்களும், வெளிநாடுகளுக்கு உழைக்கச் சென்றவர்களும் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் கொண்டு கிராமங்களில் வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 07, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 07, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி
Dinamani Chennai

தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி

தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
February 18, 2025
தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி
Dinamani Chennai

தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

time-read
1 min  |
February 18, 2025
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்
Dinamani Chennai

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்

தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
Dinamani Chennai

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி
Dinamani Chennai

விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை.

time-read
1 min  |
February 18, 2025
மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!
Dinamani Chennai

மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!

மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.

time-read
2 dak  |
February 18, 2025
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
Dinamani Chennai

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
2 dak  |
February 18, 2025
Dinamani Chennai

பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
February 18, 2025
அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி
Dinamani Chennai

அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி

மனித வாழ்வு அன்பில் பிறந்து, அன்பில் வாழ்ந்து இறுதியில் அன்பில் முடிவடைகிறது. அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல் என மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார்.

time-read
1 min  |
February 18, 2025
கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
Dinamani Chennai

கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு

கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.

time-read
1 min  |
February 18, 2025