
அயுர்வேதம் மனிதனின் ஆயுளை 100 ஆண்டுகள் என்கிறது. அவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தவர்களைத் தேடினால், ஸ்ரீரங்கத்தில் 120 ஆண்டுகள் வாழ்ந்த வைணவச் செம்மலான ஸ்ரீராமானுஜாச் சாரியாரின் திவ்ய சரீரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவது மட்டும் நமக்குத் தெரிகிறது. மனிதர்கள் பல காலம் இருப்பது துர்லபம். ஆனால், மாமனிதர்களால் தொடங்கப் பெற்ற, அருளாளர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அமைப்புகள், மடங்கள் பல நூற்றாண்டுகளாக மக்கள் சேவையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
கை, கால்கள் அசைவது தெரிகிறது. ஆனால், இதயம் துடிப்பதை வெகு சிலரே அவதானிப்பர். அதுபோன்று, சென்னையில் 127 ஆண்டுகள் தொய்வின்றித் தொடர்ச்சியாக ஆன்மிக, சமய, மருத்துவ, கல்வி, பண்பாடு, புத்தக வெளியீடு, இளைஞர் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சுய தொழில் வளர்ப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவையும் துணிகளையும் துணிவையும் வழங்கிச் சேவையாற்றி வருகிறது சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம்.
இந்த மடத்தைத் தொடங்கியவர் சுவாமி ராமகிருஷ்ணானந்தர். அவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 16 செல்வங்களாக வந்தமைந்த சீடர்களுள் ஒருவர். சுவாமி விவேகானந்தரால் தென்னகத்துக்கு அனுப்பப்பட்டு ராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர். சுவாமிகள் ஆரம்பித்த எதுவும் சிறிதாகத் தொடங்கும்; சீர்மையாக மலரும்; தொய்வில்லாமல் நடைபெறும்; தொடர்ந்து மக்களுக்கு பயன் தரும்.
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சேவைகளுள் முக்கியமான ஒன்றான தர்ம வைத்தியசாலை தனது நூற்றாண்டை இன்று கொண்டாடுகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கோப்பை தேநீர் கூடக் கிடைக்காத இந்தக் காலத்தில், இந்த மருந்தகத்தில் வரும் நோயாளிகள் ஒரு ரூபாய் கொடுத்தாலே போதும்; மருத்துவர்களின் நேரடி ஆலோசனை பெற்று இலவசமாக மருந்துகளும் வாங்கிச் செல்லலாம்.
Bu hikaye Dinamani Chennai dergisinin March 22, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin March 22, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!
நாசாவின் மனித விண்வெளிப் பயண ஆய்வுத் தலைவரான வில்லியம் எச்.கெர்ஸ்டென்மேயர், ஒரு நிறுவனத்தை, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பாராமல் சர்வரோக நிவாரணி மாதிரி, நெருக்கமான தனியாருக்கு ஒப்படைத்தால், அது அதிபர்களின் 'தன்வழி' என்றுதான் பார்க்கப்படும் என்று நம்பினார்.

வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.

இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு
சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.

அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்-ஆற்காடு இளவரசரின் திவான் முஹம்மத் ஆசிப் அலி
அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து வாழ வேண்டும் என்று தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முஹம்மத் ஆசிப் அலி தெரிவித்தார்.
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்
காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை

முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினார் கௌஃப்
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனர்.

35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
இணைய வழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு-கூட்டணி குறித்து பேச்சு?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலியாக அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.