கோபிய ரோடு ராசக் கிரீடை புரிந்து ஆடி பாடியதை படித்தும் கேட்டும் இருக்கிறோம. செந்தமிழ், மாயக் கண்ணன் ஆடிய பல வகை யான நடனங்களை சொல்கிறது. அவற்றையும் அனுபவிப் போமா?
அல்லியம்
தனுர் யாகம் செய்வதாகவும், அதற்கு கண்ணனும் பலராமனும் வருகை தர வேண்டும் என்றும், உத்தவர் மூலம் நந்தகோபருக்கு தூது அனுப்பினான் கம்சன். உண்மையில் அவனது நோக்கமே வேறு. பல வகையில் கண்ணனை கொல்ல முயன்று கம்சன் தோல்வியை அடைந்தான். ஆகவே, கண்ணனை நேரே, தனது நகரமான மதுரா விற்கு அழைத்து வந்து, தன்னிடத்தில் தனது சகாக்களின் உதவியோடு கண்ணனை கொன்று விடலாம் என்று கனவு கோட்டை கட்டினான் கம்சன். ஆனால், இதற்கெல்லாம் கண்ணன் சிக்குவானா என்ன?
உத்தவரின் அழைப்பை ஏற்று, வட மதுரையில் நுழைந்தான் கண்ணன். தனுர் யாகம் நடக்கும் யாகசாலைக்குள் கம்பீரமாக நுழைய எத்தனித்தான். அவனை தடுத்தது குவலயாபீடம் என்ற யானை. யாகசாலையில் நுழையும் கண்ணனை கொல்லும் பொருட்டு அந்த யானையை யாகசாலைன் நுழைவாயிலில் தயாராக வைத்து திருந்தான் கம்சன். கம்சன் ஏவிய குவலையாபீடம் என்ற யானையின் தந்தத்தை உடைத்து, அதை சம்ஹாரம் செய்தான் கண்ணன். இந்த வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ஆடும் நடனம் தான் அல்லியம் என்ற நடனம். தமிழர்களின் பழம் பெரும் நூலான சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு ஆடலுள் ஒரு ஆடலாக இளங்கோவடிகள் இதை வர்ணிக்கிறார்.
"கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் அல்லியத்தொகுதி" (சிலம்பு: கடலாடு காதை 46-47)
Bu hikaye Aanmigam Palan dergisinin July 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Aanmigam Palan dergisinin July 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இரவில் சாப்பிடக் கூடாதவை
\"இரவு நேரம்! புலவர் ஒரு வர் அயலூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரைக் கண்டு வரச் சென்றிருந்தார். புலவரைப் பார்த்த நண்பர் மிகுந்த மகிழ்வுடன், “வாருங்கள்! வாருங்கள்! முதலில் உண்டுவிட்டு பிறகு பேசலாம்” என்றார். புலவரோ, “நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு தீர்ச்சற்று ஓய்வெடுக்கிறேன். அதன்பிறகு உண்ணலாம்” என்றார். இருவருமாகச் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!
அதி அந்தம் இல்லாத அருள் பெரும் சோதியாய் விளங்கும் பரம் ஆம் பொருள் அருவன் ஆயினும் அன்பர்க்கு உருவாய் வருவன் என்ற மாமறைக்கிணங்க அருவுருவத் திருமேனியான இலிங்க வடிவில் தன்னை வெளிப் படுத்திக் கொண்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை யாகும்.
விளாம்பழ நிவேதனம்
பாரத தேசத்தின் தொன்மையான மரவகைகளில் ஒன்று விளாமரமாகும். இது படர்ந்து செழிந்து வளர்வது.
சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர்
பாயர்வுக்கு துதிந்திருமுகங்கள் தபாவதாரத்தை கடலில் பள்ளிகொண்டருளும் பரந்தாமன், பத்து அவதாரங்கள் எடுத்தபோதும் உடன் முழுமையாகக் கண்ட பெருமைக்குரிய சுதர்சனமே, பக்தர்தம் வாழ்வில் வரும் தடைகளை விரட்ட பகவானால் பிரயோகிக்கப்படுகிறது.
ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!
“ஆகவே அர்ஜுனா, ஆன்மாவைப் பற்றியதான சந்தேகம் தெளிந்தாயல்லவா? இனிமேலும் ஏதேனும் சந்தேகம் இருக்கு மானால், அதை ஞானம் என்ற வாளால் வெட்டி எறி.
சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கிருஷ்ணராஜா நகர் (கே. ஆர். நகர்) அருகில் சுஞ்சனகட்டே கிராமம் உள்ளது.
கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!
கண்ணன் குழல் ஊதிய வரலாற்றை நாம் கேட்டு இருக்கிறோம். நச்சு அரவமான காளிங்கன் மீது களித்து திருநடனம் புரிந்ததை பற்றி கேட்டிருக்கிறோம.
அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி
அன்று சர்வாலங்கார பூஷிதையாக அகலமான கரை போட்ட பச்சைநிற பட்டுப்புடவையில் ஜொலித்தாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.
மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்
ஒரு ஆலயத்தில் மகாகவி பாரதியாருக்கு விக்ரகப் செய்து, அவரை பதின்மூன்றாவது ஆழ்வாராக உயர்த்திப் போற்றி வழிபட்டு வருகிறார்கள். பாரத தேசத்தில் எங்கும் செய்யப்படாத மாறுதலான ஓர் ஆன்மிகம் சேவையை சென்னை அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் செய்திருக்கிறார்கள்.
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!
ஆனித் திருமஞ்சனம் ஜூலை 11 - 12, 2024