
வளரும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதன குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் கட்டுப்படுத்தப்படுமா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடந்த மோசடியில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.1.75 லட்சத்தை இழந்துள்ளார். இது போன்ற மோசடிகள் எப்படி நடக்கிறது என பார்த்தால் சமூக வலைதளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நபரின் வீடியோ பதிவு போன்றவற்றின் மூலம் அவரது குரல் மாதிரியை மோசடி கும்பல் எடுத்துக் கொள்கிறது. பின்பு அந்த குரல் மாதிரியை ஏஐ மூலம் குளோனிங் செய்து, அவருக்கு தெரிந்த நபர்களிடம் பேசி ஏமாற்றுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சைமன் நகரைச் சேர்ந்த மாணவர், அயர்லாந்து நாட்டில் மேற்படிப்பு படித்து வருகிறார். சமீபத்தில் மாணவனின் தாயார் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி எனக்கூறி தன்னை அறிமுகப்படுத்திய நபர் மிரட்டும் தோரணையோடு பேசியுள்ளார்.
அயர்லாந்தில் படிக்கும் அவரது மகன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி மாணவனின் தாயாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். கேட்டதும் வெடவெடத்து போன பெண்ணுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மாணவன் அழுவது போன்ற ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்து அச்சுறுத்தியுள்ளார்.
தங்களது மகனை விடுவிக்க வேண்டுமென்றால் கேட்கும் பணத்தை தரும்படி கூறி மிரட்டியுள்ளார். அதை உண்மை என நம்பிய அந்த பெண், மர்ம நபர் கொடுத்த எண்ணிற்கு 'கூகுல் பே' மூலம் 85 ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளார்.
வாங்கிய பணம் போதாது இன்னும் தேவை என நிபந்தனை விதிக்க, தன் உறவினரின் 'கூகுல் பே கணக்கில் இருந்து 90 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பணம் வாங்கியதும் மர்ம நபர் வாட்ஸ்அப் எண்ணை ப்ளாக்கில் போட்டு மாயமானார்.
இதற்கிடையே தனது மகனுக்கு அழைத்துப் பேசிய போதுதான் இது திட்டமிட்ட மோசடி என தெரியவந்தது. வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவது போல இளைஞரின் குரலைப் பதிவு செய்து, அதை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அழுவது போன்று மாற்றி, மெகா மோசடியை அரங்கேற்றியது அம்பலமானது.
Bu hikaye Kanmani dergisinin November 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin November 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

நம்மை நாமே நேசிக்கணும்!
மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

வியூகம் வகுக்க பிடிக்காது!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

கனவை நினைவுபடுத்த முடியுமா?
உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

உலக மகளிர் தினம் !
1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.