![புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி? புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?](https://cdn.magzter.com/1344235173/1707316592/articles/WFz55KShK1707743668715/1707743985347.jpg)
புரிதல் என்பது ஒருவரின் இயல்பினை அறிந்து அதற்கு இணக்கமான முறையில் நடந்து கொள்ளும் முறை.
ஒரு குடும்பத்தில் புரிதல் இல்லை என்றால் தம்பதிகள் வாழ்க்கை சிறக்காது. உண்மை காதல் இருந்தால் புரிதல் எளிதாகிறது.
பிள்ளைகள் குணமறிந்து பெற்றோர் அவர்களை வழி நடத்தும் விதம் புரிதலை தெளிவாக்குகிறது.
நட்பில் புரிதல் மற்றும் நம்பிக்கை இரண்டும் வேண்டும். நட்பில் புரிதல் இல்லை எனில் நண்பர்களிடையே இணக்கம் இருக்காது.
சமுதாய வாழ்க்கையில் புரிதல் இல்லை எனில் ஊருடன் ஒத்து வாழ்வது கடினம். மொத்தத்தில் வாழ்க்கையில் புரிதல் இல்லை எனில் உலக வாழ்க்கையுடன் இணங்கி வாழ்தல் கடினம்.
ஒருவரின் தெரிந்த குணங்களை வைத்து மட்டும் வைத்து புரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது. அவரிடம் நமக்கு தெரியாத குணங்களும் கட்டாயம் இருக்கும். அந்த குணங்கள் அவருக்கே உரிய சமூக, பொருளாதர பின்புலம் மூலம் உருவானதாக இருக்கும்.
தவிர, படித்த புத்தகங்கள், சந்தித்த மனிதர்கள் மற்றும் அவர்களால் பெற்ற அனுபவங்கள், அவர்களின் சுய சிந்தனை போன்றவற்றாலும், ஒருவரின் குணங்கள் கட்டமைக்கப் பட்டிருக்கும்.
ஒருவரின் குணங்கள் நாம் விரும்பியபடி இருக்க வேண்டியதில்லை. முற்றிலும் மாறாக இருக்கலாம். அந்த குணங்கள் சரி அல்லது தவறாக இருந்தாலும் ஒருவரை அப்படியே ஏற்று கொள்ளுதல் நட்பின் முதல்படியாகவும், காலம் செல்ல, செல்ல இருவருக்குமான உரையாடல்கள் மூலம் சரியானவற்றை தெரிந்து கொள்ளுதலுமே சரியான புரிதலாக இருக்ககூடும். இதுவே புரிதல் என்பதற்கான அரிச்சுவடி.
ஒருவரது உணர்வுகளை மற்றொருவர் அப்படியே ஏற்றுக்கொள்ளுதலே சிறந்த புரிதல் ஆகும்.
கணவர், மனைவி இருவரிடையே மட்டுமல்லாது எந்த உறவுமுறை எனினும் அவரவர் எண்ணங்களை தனியாக வெளிப்படுத்திட வழிவிடுதலே சிறந்தது.
Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![பட்டை குறியீடு (பார்கோடு) பட்டை குறியீடு (பார்கோடு)](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/z5h5nyqaI1737982807776/1737982941681.jpg)
பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.
![தவறுகளும், மாற்றங்களும்.. தவறுகளும், மாற்றங்களும்..](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/eqOnsGj8J1737983894338/1737984014025.jpg)
தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..
![எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது! எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/n8EtC2aab1737982943104/1737983257484.jpg)
எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.
![பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்! பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/IgBmm9iW81737984268746/1737984391566.jpg)
பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.
![மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...! மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/iuzg5Ps9_1737983588540/1737983684031.jpg)
மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.
![தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...! தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/vZ4BEaXHO1737983689515/1737983888631.jpg)
தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.
![எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்! எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/AS7AmyPXt1737982560817/1737982806249.jpg)
எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.
![கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...! கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/iVsXr9djQ1737983391525/1737983498738.jpg)
கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.
![திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்! திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/q5mRDgvrv1737984635239/1737984982411.jpg)
திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.
![உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது! உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/q9u1OH62B1737984997069/1737985361143.jpg)
உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.