பானை வியாபாரம் செய்பவராக சந்தானம். அவரது பானை ஒன்றால், ஊருக்குள் இருந்த 'காட்டேரி' பிரச்னை விலகுகிறது. மக்களின் மூட நம்பிக்கையை வைத்து காசு பார்க்கத் திட்டமிடும் சந்தானம், கோயில் ஒன்றை எழுப்புகிறார். கோயில் சொத்தை அடைய முயற்சிக்கிறார் தாசில்தார் தமிழ். அதற்கு சந்தானம் ஒத்துழைக்காததால் கோயிலை மூடப்படுகிறது. மீண்டும் திறக்க என்ன செய்கிறார் சந்தானம் என்பது மீதிக்கதை.
சந்தானத்தின் ஒன்லைனர்கள், உடன் நடித்த மாறன், சேஷு உட்பட்டோரின் காமெடி அதகளங்கள் என்று படம் முழுக்க ஆங்காங்கே சிரிக்க முடிகிறது. சில காட்சிகளுக்கான லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இதுல அதெல்லாம் பாக்க வேணாம்பா என்று தோன்றுவதால் படம் தப்பிக்கிறது.
டெவில், திருமணம் மீறிய உறவைச் சுற்றி நடக்கும் கதை. ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா,திருகுன் இன்னும் பலர் நடித்திருக்கும் படத்தில் பூர்ணாவுக்கு ஒரு நட்பும், விதார்த்துக்கு அலுவலத் தில் ஒரு நட்பும் கிடைக்கிறது. நட்பு, அடுத்த கட் டத்துக்குப் போகிறது. இப்படிப் போகும் கதையில் பின்னால் அமானுஷ்யம், ஹாரர் என்று கலந்து கட்டி முடித்திருக்கிறார்கள்.
உறவுச்சிக்கல்களைச் சொல்லும் படங்கள் மிகக்குறைவு. இப்போதுதான் திருமண வாழ்வில் உறவுச் சிக்கல்களைப் பேசிய இறுகப்பற்று பேசப்பட்டது. அதே போல, உரையாடல்களில் உறவுகளை அலசும் படங்கள் இந்தியில் அதிகம் வந்திருக்கிறது. அப்படியான படமாக இருந்திருக்க வேண்டிய இப்படம், எல்லா ஜானரிலும் கலந்து கட்டிப் பயணித்ததால் ஆயாசம்தான் மிஞ்சுகிறது. பூர்ணாவின் நடிப்பு ஒன்றுதான் ஆறுதல்.
This story is from the March 24 edition of Andhimazhai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 24 edition of Andhimazhai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.