CATEGORIES
فئات

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் தமிழ் நிலப்பரப்பில் இருந்து தாள் இரும்புக்காலம் தொடங்கியது
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை\" புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கீழடி அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், இணையதளத்தினை தொடங்கி வைத்தல் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ந் தேதி நடக்கிறது.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் படி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் குலசேகரமங்கலம் மஜரா தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டும், கழிவு நீரோடை வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாத தெருக்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், வெள்ளாளங்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி தொடங்கியது.

பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டமசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி விருப்பம்
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது கூறியதாவது, அறிவியல் கண்காட்சி, புதுச்சேரியில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க நடத்தப்படுகிறது.

மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாம்
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு சாரா இல்ல மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாமை வேலூர் அப்துல்லாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க.எம்.பி.கதிர் ஆனந்த் ஆஜர்
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது
காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குனர் முனைவர் குலசேகரனுக்கு, சிறந்த சமூக ஆர்வலர் விருது.

அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
நாள்சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர்.

விளையாட்டு பொருட்கள் கண்காட்சி முதல்வர் துவக்கி வைத்தார்
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் புதுச்சேரி, கருவடிக்குப்பம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் \"குழந்தைகள் புத்தகம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி\" ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக உள்ளது.

ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு: சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு
பீகார் தலைநகர் பாட்னாவில் சட்டப்பேரவை தலைவர்கள் (சபாநாயகர்கள்) மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமை தாங்கினார்.

வன அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், வனத்துறை சார்பில், மாநில அளவிலான வன அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டத்தில், வன தீ தடுப்பு திட்டத்தின்கீழ், தீயணைப்பு கண்காணிப்பாளர்களுக்கு தீ தடுப்பு உபகரணங்களை வனத்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

விக்கிரமங்கலம் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் கிராமத்தில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற, ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்லபிள்ளைத் தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ அங் காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலயத்தை புதுப்பித்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நடத்த பெரியோர்கள் முன்னிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும் 2025ம் ஆண்டிற்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் நடைப்பெற்றது.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத் தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைபுரிவதை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர் களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடை பெற்றது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

வில்லியனூர் சுகாதார நிலையம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு

சத்தீஷ்காரில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 12 பேர் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

குடியரசு தின விழாவில் புதுச்சேரி பிரதிநிதிகளாக பங்கேற்கும் 2 பழங்குடியினருக்கு விமான டிக்கெட்
முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்

காரைக்குடி அழகப்பா பல்கலையில் ரூ.12 கோடி மதிப்பில் புதிய நூலகம் யா
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதுச்சேரி நகர பகுதிகளில் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனை
புதுச்சேரியில் குடியரசு தினத்தை யொட்டி நகரப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரிலீஃப் லைஃப் டிரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மைய ஆண்டு விழா
சேலம் ரிலீஃப் லைஃப் டிரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் மூன்றாம் ஆண்டு விழாவானது, குரங்கு சாவடி பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள சிலம்புலி ஹாலில் நடைபெற்றது. ரிலீஃப் லைஃப் கேர் டிரஸ்ட்ன் நிறுவனர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு
சென்னை, ஜன. 20அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி பிராமண பிரதிநிதிகள் கூட்டம்
சென்னை, திருச்சி, மதுரை, போன்ற பகுதிகளில் பிராமணர் களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன.

நலத்திட்ட உதவி வழங்கல்
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கந்திலி ஒன்றிய தலைவர் முனுசாமி.