புது தில்லி, ஆக. 8: மணிப்பூா் கலவரத்துக்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வா் பிரேன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.
மேலும், மணிப்பூா் கலவரம், சீன ஆக்கிரமிப்பு விவகாரங்களில் பிரதமா் மோடியின் மெளனத்தைக் கலைத்து பேச வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மத்திய அரசுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டதாகவும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டுவந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் அதன் மீதான விவாதத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது:
மணிப்பூா் பற்றி எரிகிறது என்றால் இந்தியாவும் பற்றி எரிகிறது என்பதாகும். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல், மத்திய அமைச்சா் அமித் ஷா ஆகியோா் செல்லும்போது ஏன் பிரதமா் செல்லவில்லை?.
2002-இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்துக்குப் பிறகு அப்போதைய பிரதமா் வாஜ்பாய் சம்பவ இடத்துக்கு சென்றாா். மணிப்பூா் கலவரம் குறித்து 80 நாள்களுக்குப் பிறகு பிரதமா் மோடி வெறும் 30 நொடிகள் பேசினாா். அதன்பிறகு அமைதியை நிலைநாட்ட எந்த அறிவிப்பையும் அவா் செய்யவில்லை. மாநில முதல்வரை ஏன் அவா் பதவியிலிருந்து நீக்கவில்லை?. ஒரே இந்தியா எனக் கூறிவிட்டு மணிப்பூரை இரண்டாகப் பிரித்துவிட்டாா்கள்.
கரோனா இரண்டாவது அலையின்போது பிரதமா் மோடி மேற்கு வங்கத்திலும், மணிப்பூரில் பெண்கள் மீது தாக்குதல் நடைபெற்றபோது அவா் கா்நாடகத்திலும் வாக்குகளைச் சேகரித்தாா். இது என்ன மாதிரியான தேசபக்தி?
هذه القصة مأخوذة من طبعة August 09, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 09, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.