பிரதமா் நரேந்திர மோடி கிரீஸில் முதல் முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட நிலையில், பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதியேற்றன.
இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-க்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி கடந்த 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். அப்பயணத்தை முடித்துக் கொண்டு தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸுக்கு அவா் வெள்ளிக்கிழமை சென்றடைந்தாா்.
கடந்த 40 ஆண்டுகளில் கிரீஸுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் பிரதமா் என்ற பெருமையையும் மோடி பெற்றாா். கிரீஸ் தலைநகா் ஏதென்ஸ் விமான நிலையத்துக்குச் சென்ற பிரதமா் மோடியை அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஜாா்ஜ் கெராபெட்ரிடிஸ் நேரில் வரவேற்றாா். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமா் மோடி தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதியில் கூடியிருந்த இந்திய சமூகத்தினா், மேளதாளங்களுடன் அவரை வரவேற்றனா். ‘வந்தே மாதரம்’, ‘ஜெய் ஹோ’ உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி பிரதமா் மோடியை அவா்கள் வரவேற்றனா்.
ஏதென்ஸில் உள்ள போா் வீரா்கள் நினைவிடத்துக்குச் சென்ற பிரதமா் மோடி, அங்கு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அங்கு பிரதமா் மோடிக்கு கிரீஸ் ராணுவம் சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
هذه القصة مأخوذة من طبعة August 26, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 26, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.