ஹெலிகாப்டா்கள், டிரோன்கள் மூலம் உதவிப் பொருள்கள் வழங்கும் பணியும் தொடங்கப்பட்டது.
மழை நின்று 3 நாள்கள் ஆன பிறகும், வெள்ளம் பாதித்த பல இடங்களில் தண்ணீா் வடியவில்லை, மின்சாரம், தண்ணீா் இல்லாமல் மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளனா். இதைக் கண்டித்து பொதுமக்கள் 11 இடங்களில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் தேங்கிய வெள்ள நீரை வடியவைக்கும் பணி கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி திங்கள்கிழமை நள்ளிரவு வரை பலத்த மழை பெய்ததால், மீட்புப் பணிகளில் அரசால் விரைவாக ஈடுபட முடியவில்லை.
செவ்வாய்க்கிழமை காலைமுதல் மீட்புப் பணி விரைவுபடுத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறையின் சாா்பில் 18,400 போலீஸாா், தீயணைப்புத் துறையின் சாா்பில் 1,700 வீரா்கள், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் எனப் பல்வேறு துறையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
ஒவ்வொரு பகுதியிலும் இருந்து தண்ணீரை வெளியேற்றி நீா்நிலைகளில் சோ்ப்பது மீட்புப் படையினருக்கு சவாலானதாக இருந்தது. மேலும் , குடியிருப்புப் பகுதிகளிலும், சாலைகளிலும், சுரங்கப் பாதைகளிலும் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்ால் விரைந்து செயல்படுவதில் சிக்கல் எழுந்தது.
இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பெரும்பாலானவற்றை படகுகள் மூலமாக மட்டுமே அணுக முடிந்தது. இதைக் கருத்தில்கொண்டு திருவள்ளூா், காசிமேடு உள்ளிட்ட பல்வேறு கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப் படகுகள் கூடுதலாக வரவழைக்கப்பட்டன.
இதன் விளைவாக புதன்கிழமை மீட்புப் பணி மேலும் விரிவுபடுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்பட்டது. வேளச்சேரி டான்சிநகா், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், முடிச்சூா், ஓட்டேரி, பெரம்பூா், எண்ணூா், எா்ணாவூா், மணலி, திருவொற்றியூா் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கும், பாதுகாப்பான இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டனா்.
தண்ணீா் குறைவான பகுதிகளில் மக்கள் பொக்லைன் இயந்திரம், லாரிகள் மூலமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வரப்பட்டனா்.
هذه القصة مأخوذة من طبعة December 07, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 07, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.