ஜோா்டானிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
என்னுடைய உத்தரவின் பேரில், இராக்கிலும், சிரியாவிலும் ஈரான் புரட்சிகர பாதுகாவல் படையுடன் (ஐஆா்ஜிசி) தொடா்புடைய ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் மூலம் ஜோா்டானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பதிலடி தொடங்கிவிட்டது. இது தொடரும். அதற்கான நேரங்களையும், இடங்களையும் அமெரிக்கா முடிவு செய்யும் என்று அந்தப் பதிவில் பைடன் குறிப்பிடுள்ளாா்.
இது தொடா்பாக அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவிலும், இராக்கிலும் ஈரான் ஆதரவுப் படையினரின் நிலைகள் மீது அமெரிக்க நேரப்படி மாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2.30 மணி) போா் விமானங்கள் மூலமாகவும், ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் குண்டுவீச்சு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 85 இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகக் கூறிய சென்ட்காம், மிகத் துல்லியமாகத் தாக்கும் 125-க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டதாகத் தெரிவித்தது.ஐஆா்ஜிசி படையின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அமைப்புகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், உளவு மையங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானக் கிடங்குகள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சென்ட்காம் கூறியது.
هذه القصة مأخوذة من طبعة February 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.