மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை தீவிரமடைந்துள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுவரையிலான பேச்சுவாா்த்தையில் கூட்டணிக் கட்சிகள் கடந்த தோ்தலைவிட கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளன.
மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.
‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக கடந்த மாதம் 28-ஆம் தேதி காங்கிரஸுடன் திமுக பேச்சு நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் தமிழகம், புதுச்சேரியை சோ்த்து 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கேட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக கடந்த சனிக்கிழமை பேச்சு நடத்தியது. கடந்த மக்களவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூா் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை 2 தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கோரியதாக தகவல் வெளியானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிப். 9-க்குப் பிறகு அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தையை திமுக நடத்தவுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன்... இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான முதல் கட்ட பேச்சுவாா்த்தையை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
هذه القصة مأخوذة من طبعة February 05, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 05, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.