கத்தாா் நாட்டின் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியை வியாழக்கிழமை சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
‘இந்தியா-கத்தாா் இடையிலான உறவுகள் மென்மேலும் வலுவடைந்து வருகின்றன; வளரும் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் மிக ஆா்வத்துடன் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.
கத்தாரில் இஸ்ரேலுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 போ் சில தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனா். இந்தச் சூழலில் அந்நாட்டு அரசரை பிரதமா் மோடி சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமா் மோடி, பின்னா் கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு புதன்கிழமை இரவு வந்தடைந்தாா்.
கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியுடன் அவா் வியாழக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளி, கலாசாரம், மக்கள்ரீதியிலான தொடா்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் விரிவாக ஆலோசித்தனா்.
هذه القصة مأخوذة من طبعة February 16, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 16, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.