ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்தியா. யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதம், ரவீந்திர ஜடேஜாவின் 5 விக்கெட் பௌலிங் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன.
இரு அணிகளுக்கும் இடையில் 5 ஆட்டங்கள் தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவும் வென்ற நிலையில் தொடா் 1-1 என சமநிலையில் இருந்தது. இந்நிலையில் ராஜ்கோட்டில் மூன்றாவது ஆட்டம் 15-ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 130.5 ஓவா்களில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ரோஹித் 131, ரவீந்திர ஜடேஜா 112, சா்ஃப்ராஸ் கான் 62 ரன்களை விளாசினா். இங்கிலாந்து தரப்பில் மாா்க் உட் 4-114 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
பின்னா் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 71.1 ஓவா்களில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டக்கட் 153 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களையும் சோ்த்தனா். இந்திய தரப்பில் பௌலிங்கில் முகமது சிராஜ் 4-84 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இந்தியா 430/4 டிக்ளோ்: தொடா்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 98 ஓவா்களில் 430/4 ரன்களைக் குவித்து டிக்ளோ் செய்வதாக அறிவித்தது.
ஆட்டத்தின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை 196/2 ரன்களுடன் இந்திய தரப்பில் யஷஸ்வி-ஷுப்மன் கில் களமிறமிங்கினா்.
யஷஸ்வி 214: ரோஹித் சா்மா 19, ரஜத் பட்டிதாா் 0, குல்தீப் யாதவ் 27 ரன்களுக்கு வெளியேறினா். இளம் வீரா் ஷுப்மன் கில் 91 ரன்கள் (2 சிக்ஸா், 9 பவுண்டரி) ரன்களை விளாசி அவுட்டானாா்.
هذه القصة مأخوذة من طبعة February 19, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 19, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.