தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் முட்டுக்கட்டை போடும் திமுக அரசு, நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
பாஜக சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கெல்லாம் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத அரசு இங்கு நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு என்ன செய்தாலும் அதை குறை சொல்கிறார்கள். அதையும் மீறி நாங்கள் மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறோம்.
இவர்கள் ஏன் நாட்டின் வளர்ச்சியை, நலத் திட்டங்களைத் தடுக்கிறார்கள் என மக்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் வளர்ச்சியைத் தடுப்பதே நாட்டை கொள்ளையடிப்பதற்காகத்தான். ஆனால், அதற்கு இடம்தர மாட்டோம். இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்துவோம்.
தமிழகத்துக்கும், ராமருக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறார்கள். ராமர் கோயிலை திறப்பதற்கு முன்பு ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பூஜை செய்தோம். ஒட்டுமொத்த தேசமும் ராமர் கோயில் திறப்பைக் கொண்டாடியது. நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது, திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களாகிய உங்களுடைய நம்பிக்கையை திமுகவினர் எதிர்க்கிறார்கள். வெறுப்பு அரசியலைப் பரப்புகிறார்கள். திமுக தனது குடும்ப வளர்ச்சியைத்தான் பார்க்கிறதே தவிர, மாநில வளர்ச்சியைப் பார்க்கவில்லை.
هذه القصة مأخوذة من طبعة February 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.