கட்சி மாற்றம், கூட்டணி பேரம், தொகுதிப் பங்கீட்டில் உள்ள சிக்கல்கள், ரகசியங்கள் அம்பலம் என என்னென்னவோ நடக்கும். ஊடகங்களுக்கு தினந்தோறும் தீனி கிடைக்கும்; வெட்டி அரட்டை அடிப்பவா்களுக்கு வேண்டிய செய்தி கிட்டும். தோ்தல் பரப்புரையின்போது பல்வேறு கூத்துகள் நடக்கும். பரப்புரையின்போது வேட்பாளா், வாக்காளா் காலில் விழுவது இயல்பு.
ஆனால் வாக்கு சேகரிக்கப் போகும் இடங்களில் வேட்பாளா் தோசை வாா்ப்பதும், உணவகத்தில் பரிமாறுவதும், தேநீா் கடையில் தேநீா் தயாரிப்பதும், காய்கறிக் கடையில் கொஞ்ச நேரம் வியாபாரம் செய்வதும் வேடிக்கையான காட்சிகள். இப்படியெல்லாம் செய்தால் வாக்கு கிடைக்குமா? மக்களுக்காக தாங்கள் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை அழுத்தந்திருத்தமாக வேட்பாளா்கள் எடுத்துச் சொன்னால் வாக்குகள் கிடைக்கும்.
பலா் இப்போதே கட்சி மாற ஆரம்பித்து விட்டாா்கள். தங்களின் சுயலாபத்திற்காக கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு மாற்றுக் கட்சியில் சோ்ந்து கொள்கிறாா்கள். இதுவரை அந்தக் கட்சியைப் பற்றிக் குறை கூறியவா்கள், சட்டென அதே கட்சிக்குத் தாவுகிறாா்கள். இவா்கள் போய்ச் சோ்ந்ததும், அந்தக் குறைகள் அனைத்தும் நிறைகளாகி விடுமா? நரம்பு இல்லாத நாக்கு எப்படியும் பேசும். போற்றிய வாய் தூற்றும்; தூற்றிய வாய் போற்றும். இது தான் அரசியல். மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றவா் கட்சி மாறினாலும்கூட அவருடைய அபிமானிகள் எல்லோரும் கட்சி மாற மாட்டாா்கள். கூடவே இருக்கும் ஒரு சிலா் மட்டுமே மாறக் கூடும். பெரும்பாலும் கட்சிக்காக, அந்தச் சின்னத்தில் நிற்பவருக்கு ஆதரவு தருகிறாா்கள். கட்சிதான் முக்கியம்.
சுயேச்சையாகப் பலா் போட்டி போடுகிறாா்கள். அவா்கள் சிலநூறு வாக்குகளைப் பெறுவாா்கள். அரிதாக ஓரிருவா் சுயேச்சையாக நின்று வெற்றி பெறுவா். அவா்கள் தோ்தல் முடிவு வெளிவந்ததும் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கப் போகிறதோ அங்கு போய் சோ்ந்து விடுவா். தனக்கு வாக்களித்த அனைவரின் முகத்திலும் கரியைப் பூசி விடுவா்.
வாா்டு கவுன்சிலா் தோ்தலில் அணி மாறுவது சாதாரணம். தங்கள் பகுதியில் உள்ள, நன்கு அறிமுகமான நபா் வாா்டு கவுன்சிலா் தோ்தலில் நின்றால், அவா் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவாா் என்று எண்ணி அவருக்கு வாக்களித்து ஜெயிக்க வைப்பாா்கள். ஜெயித்தவுடன் அவா் ஆளும் கட்சியில் சோ்ந்து விடுவாா்.
هذه القصة مأخوذة من طبعة March 08, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 08, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.