எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக சார்பில் திருச்சியை அடுத்துள்ள வண்ணாங்கோவில் பகுதியில் மக்களவைத் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் 40 வேட்பாளர்கள், விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 41 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துவைத்து எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் எந்தவொரு தேர்தல் என்றாலும் அதிமுக - திமுக இடையே தான் போட்டி என்பதை நாடே அறியும். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கடந்த இரு தினங்களாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜகவையும், என்னையும் விமர்சனம் செய்தே பேசுகிறார். அவரிடம் பேசுவதற்கு வேறு விஷயம் இல்லை. பொம்மை முதல்வராக செயல்படுகிறார்.
திமுக குடும்பத்திடம் இருந்து தமிழகத்தைக் காப்பதற்காகவே கட்சி தொடங்கியவர் எம்ஜிஆர். அவர் கட்டிக் காத்து தந்த கட்சியையும், தமிழகத்தையும் பாதுகாப்பாக வைத்திருந்தவர் ஜெயலலிதா. அவர்களது வழியில் தமிழகத்தைக் காக்கவும், தமிழர்களின் உரிமையை மீட்கவும் அதிமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஆனால், தங்களது ஆட்சிக் காலம் முழுவதும் தமிழகத்துக்கு துரோகம் செய்வது, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஆட்சி, கட்சி, பதவியில் இருக்க வேண்டும் என விரும்புகிறதுதிமுக.
7.5 சதவீத இடஒதுக்கீடு: அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டன. 6 சட்டக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரி, கால்நடை ஆராய்ச்சிக் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி எனப் பல்வேறு கல்லூரிகளைக் கொண்டுவந்து கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் என்ற நிலையை உருவாக்கினோம்.
هذه القصة مأخوذة من طبعة March 25, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 25, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.
மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மின்சார ரயில்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வார இறுதி நாள்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு
‘க்வாட்' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை புதிய அதிபர் அநுரகுமார
இலங்கை அதிபா் தோ்தலில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுர குமார திசாநாயக (56) வெற்றி பெற்றாா். அந்நாட்டின் 9-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை (செப். 23) பதவியேற்க உள்ளாா்.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.