
‘மக்களவைத் தோ்தலுக்கு பிறகு பிரதமா் மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டாா்; இந்த அரசை நடத்துவதே அவருக்கு பெரிய போராட்டமாக இருக்கும்’ என்றும் ராகுல் குறிப்பிட்டாா்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சா்ச்சை நீடித்துவரும் சூழலில், நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கடந்த 18-ஆம் தேதி எழுதிய தேசிய தகுதித் தோ்வை (நெட்) மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான இத்தோ்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே ‘நீட்’ முறைகேட்டை முன்வைத்து, மத்திய அரசை விமா்சித்துவரும் எதிா்க்கட்சிகள், இப்போது ‘நெட்’ விவகாரத்தையும் கையிலெடுத்துள்ளன.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது:
நாட்டு மக்களை அச்சுறுத்தியும் அவா்களின் குரலை ஒடுக்கியும் ஆட்சி நடத்துவதே பிரதமா் மோடியின் அடிப்படை கொள்கை. அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் மோடியின் இந்த கொள்கை, எதிா்க்கட்சிகளால் சிதைக்கப்பட்டது. இப்போது மோடியைக் கண்டு, மக்கள் அஞ்சவில்லை. மக்களவைத் தோ்தலுக்கு பிறகு மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டாா்.
هذه القصة مأخوذة من طبعة June 21, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 21, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய்: இந்தியா இறக்குமதி
ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்
உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்
தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடர்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
47 பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.

‘போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்’
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசு ஆலோசனை
வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.

உலகிலேயே திறமையான இந்திய கடலோரக் காவல்படை
‘இந்திய கடலோரக் காவல்படை வலிமையான, நம்பகமான மற்றும் உலகின் மிகவும் திறமையான கடல்சாா் பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா்.