மக்களவைத் தலைவரானார் ஓம் பிர்லா
Dinamani Chennai|June 27, 2024
பதினெட்டாவது மக்களவையின் தலைவராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் நிறுத்தப்பட்ட ஓம் பிர்லா (62) தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களவைத் தலைவரானார் ஓம் பிர்லா

மக்களவையில் புதன்கிழமை காலை நடத்தப்பட்ட குரல் வாக்கெ டுப்பைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக மக்களவை இடைக்காலத் தலைவர் பர்த்ருஹரி மகதாப் அறிவித்தார்.

இதன்மூலம், சுதந்திரத்துக்குப் பிறகு 4-ஆவது முறையாக தேர்தல் மூலம் மக்களவைத் தலைவர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தலைவரை வழக் கம்போல ஒருமனதாகத் தேர்ந்தெ டுக்கும் வகையில், எதிர்க்கட்சிக ளின் 'இந்தியா' கூட்டணித் தலைவர்களுடன் பாஜக மூத்த அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை மேற் கொண்ட ஆலோசனையில் உடன் பாடு எட்டப்படாத நிலையில், மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது அவசியமானது.

என்டிஏ கூட்டணி தரப்பில் மூன்று முறை எம்.பி.யாக தேர்வாகியுள்ள ஓம் பிர்லாவும், 'இந்தியா' கூட்டணி தரப்பில் எட்டு முறை எம்.பி.யாக தேர்வாகியுள்ள காங்கிரஸை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், மக்களவைத் தலைவர் பதவிக்கு ஓம் பிர்லா பெயரை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அவையில் முன்மொ ழிந்தார். அதை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிமொழிந்தார். தொடர்ந்து என்டிஏ கூட்ட ணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன் சிங், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சி உறுப்பினர் ஜிதன் ராம் மாஞ்சி, சிவசேனை உறுப்பினர் பிரதாப்ராவ் ஜாதவ்,லோக்ஜனசக்தி(ராம்விலாஸ் பாஸ்வான்) கட்சி உறுப்பினர் சிராக் பாஸ்வான் ஆகியோரும் ஓம் பிர்லா வின் பெயரை வழிமொழிந்தனர்.

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிதரப்பில்காங்கிரஸ்எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சி உறுப்பினர் அரவிந்த் சவந்த் முன் மொழிந்தார். திமுக உறுப்பினர் கனி மொழி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வழிமொழிந்தனர்.

هذه القصة مأخوذة من طبعة June 27, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة June 27, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
Dinamani Chennai

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு

லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.

time-read
1 min  |
September 22, 2024
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
Dinamani Chennai

எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 22, 2024
Dinamani Chennai

நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்

நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
September 22, 2024
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
Dinamani Chennai

சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 22, 2024
Dinamani Chennai

இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு

இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

time-read
1 min  |
September 22, 2024
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
Dinamani Chennai

பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது

'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

time-read
1 min  |
September 22, 2024
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
Dinamani Chennai

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.

time-read
2 mins  |
September 22, 2024
3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
Dinamani Chennai

3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

கடந்த 3 ஆண்டுகளில் 238 தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2.07 லட்சம் பேருக்கு வேலை வழங் கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 22, 2024
அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை
Dinamani Chennai

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை

அதிமுகவில் இணைப்பு பேச்சுக்கே இடமில்லை என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 22, 2024
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்
Dinamani Chennai

மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்

மாணவர்கள் சொந்தமாக புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.

time-read
1 min  |
September 22, 2024