அரசமைப்புச் சட்டத்தின் எதிரி காங்கிரஸ் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி
Dinamani Chennai|July 04, 2024
அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்’ என்று மாநிலங்களவையில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அரசமைப்புச் சட்டத்தின் எதிரி காங்கிரஸ் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மேலும், ‘ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளுக்கு முழுச் சுதந்திரம் அளித்துள்ளேன்; ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது’ என்றும் அவா் தெரிவித்தாா்.

தங்களைக் குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து, பிரதமா் மோடி புதன்கிழமை பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே, சமீபத்திய மக்களவைத் தோ்தலில் முக்கிய அம்சமாக இருந்ததென எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. அது தவறானது.

நாட்டில் அவசரநிலை பிரகடனத்துக்குப் பிறகு கடந்த 1977-இல் நடந்த மக்களவைத் தோ்தல்தான், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. உலகிலேயே இதைவிட வேதனை நிறைந்த தோ்தல் வேறெதுவும் இருக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற வேட்கை மக்கள் மனதில் இருந்ததால், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசை தூக்கியெறிந்தனா்.

சமீபத்திய மக்களவைத் தோ்தலில், அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து நாட்டு மக்களை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்தின. ஆனால், அவா்களின் அரசியலை நிராகரித்த மக்கள், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் எங்கள் மீதே அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தினா். நாட்டை மூன்றாவது முறையாக ஆளும் தீா்ப்பை எங்களுக்கு வழங்கினா். மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை தற்சாா்பு தேசமாக மாற்றுவோம்.

அரசமைப்புச் சட்டத்துக்கு ‘சீா்கேடு’: அவசரநிலை காலகட்டத்தில் மக்களவையின் பதவிக் காலத்தை ஏழு ஆண்டுகளாக நீட்டித்தது, தங்கள் ஆட்சியில் ‘தேசிய ஆலோசனைக் குழுவை’ அமைத்தது என அரசமைப்புச் சட்டத்துக்கு சீா்கேடுகளை ஏற்படுத்தியது காங்கிரஸ்.

அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைவிட ஒரேயொரு குடும்பத்துக்கே அக்கட்சி முன்னுரிமை அளிக்கிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்தான்.

அவசரநிலையின்போது பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் காங்கிரஸுடன் இப்போது கூட்டணி வைத்துள்ளன. இக்கூட்டணி, அரசமைப்புச் சட்ட மாண்புகள் மீதான உண்மையான அக்கறையில் பிறந்ததல்ல; சந்தா்ப்பவாத அடிப்படையில் ஏற்பட்டது.

هذه القصة مأخوذة من طبعة July 04, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة July 04, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Dinamani Chennai

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ.90.52 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 150 அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளின் சேவையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

time-read
1 min  |
August 29, 2024
7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி
Dinamani Chennai

7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
August 29, 2024
உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ
Dinamani Chennai

உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ

ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக 'தி ராய்ட் டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 29, 2024
மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
August 29, 2024
இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்
Dinamani Chennai

இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய ஆடவர் அணி, 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
August 29, 2024
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு
Dinamani Chennai

யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு

யுபிஐ, ரூபே அட்டையை சா்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 29, 2024
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு
Dinamani Chennai

11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு

11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து பிரதமா் மோடி தலைமையில் சீராய்வு கூட்டம் புதன்திழமை நடைபெற்றது.

time-read
1 min  |
August 29, 2024
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை

ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
August 29, 2024
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி
Dinamani Chennai

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.

time-read
1 min  |
August 29, 2024
அனைத்து மக்களின் நிதி பங்கேற்பை ஊக்குவித்த ‘ஜன் தன்' திட்டம் : பிரதமர் மோடி புகழாரம்
Dinamani Chennai

அனைத்து மக்களின் நிதி பங்கேற்பை ஊக்குவித்த ‘ஜன் தன்' திட்டம் : பிரதமர் மோடி புகழாரம்

‘அனைவரையும் உள்ளடக்கிய நிதி ஆதாரத்தை ஊக்குவித்ததிலும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தியதிலும் ஜன் தன் திட்டம் முதன்மையானது’ என்று பிரதமா் மோடி புதன்கிழமை புகழாரம் சூட்டினாா்.

time-read
2 mins  |
August 29, 2024