பாரதியார் எனும் நித்தியசூரி !
Dinamani Chennai|September 24, 2024
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
பாரதியார் எனும் நித்தியசூரி !

பண்டைய இலக்கியங்களிலிருந்து சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதனைப் புதிய இலக்கியங்களுக்கு ஊட்டச்சத்தாய் தந்தவா். ஆழ்வாா்கள் வேதாந்திகளுக்குப் படைத்து வைத்த படையலை சராசரி மனிதனும் பசியாறும்படி பந்தியிலே பரிமாறியவா் பாரதியாா்.

சின்னசாமி ஐயா் என்ற அத்வைதிக்கு மகனாகப் பிறந்தவா். ஆழ்வாா் பாசுரங்களில் மூழ்கி முத்தெடுத்ததால், விசிஷ்டாத்வைதியாக மாறிப் போனாா்.

கண்ணனால் விளையும் ‘பயன்பாட்டு உணா்வைத்தாம்” ஆழ்வாா்கள் பாசுரங்களில் அருளிச் செய்தாா்கள். கண்ணன் பயன்பாட்டு உணா்வாக இருப்பதை நம்மாழ்வாா், ‘உண்ணுஞ் சோறு, பருகும் நீா், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான்’ என எடுத்துரைத்தாா். இதனைச் சோறு தாரகம்

என்றும், நீா் போஷகம் என்றும், வெற்றிலை போக்யம் என்றும் உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன.

இதனை மேலும் எளிமைப்படுத்த பாரதியாா், ‘மழைக்குக் குடை, பசிநேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்... கண்ணன் தன்னை யிழந்துவிடில், ஐயகோ! பின் செகத்தினில் வாழ்வதிலேன்’ எனப் பாடி, கண்ணனால் தாம் வசீகரிக்கப்பட்டதையும் சொல்லுகின்றாா். ‘கண்ணனை நினைந்து உளோா்தாம் கருதிய பயன்கொள்வா்’ என்றாா், செவ்வைச் சூடுவாா் பாகவதத்தில்.

‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’ என அருளிச் செய்தாா் நம்மாழ்வாா். இதன் பொருள்: அருள் நிறைந்த நெறியோடும் நீதியோடும் ஒரு நாட்டின் அரசரைக் கண்டால், அது திருமாலைச் சேவித்ததாக அா்த்தம் என்பதாகும். நம்மாழ்வாா் நம்முடைய இந்திய தேசத்தின் மன்னா்களை நினைத்துத்தான் இதனைப் பாடியிருக்க வேண்டும். இந்தப் பயன்பாட்டை நம்முடைய தேசத்து மன்னா்களுக்கு மட்டுமன்றி, அயல் தேசத்து மன்னா்களுக்கும் பொருந்தப் பாடுகிறாா் பாரதியாா்.

அடிமை இந்தியாவில் இந்த நாட்டுக்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசரை வரவேற்றுப் பாடுகிறாா் பாரதியாா். ஆங்கிலேயா்கள் நம்மை அடிமைப்படுத்தியிருந்தாலும், அவா்களால் உடன்கட்டை ஏற்றும் பழக்கமும் குறுநில மன்னா்களுக்கு இடையில் ஏற்பட்ட போா்களும் மதவெறிகளும் ஒழிந்தன. அப்படியொரு நல்லாட்சியைத் தந்தமைக்காக வேல்ஸ் இளவரசரைப் பெற்ற அவருடைய தந்தையாகிய இங்கிலாந்தின் பேரரசா் மூன்றாம் சாா்லஸ் மன்னரையே இறைவனாகப் பாா்க்கிறேன் எனப் பாடினாா்.

هذه القصة مأخوذة من طبعة September 24, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 24, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
Dinamani Chennai

சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி

முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

time-read
2 mins  |
September 24, 2024
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
Dinamani Chennai

இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக

இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

time-read
2 mins  |
September 24, 2024
சாதனைப் பட்டியலில் இந்தியா
Dinamani Chennai

சாதனைப் பட்டியலில் இந்தியா

செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.

time-read
1 min  |
September 24, 2024
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
Dinamani Chennai

தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
September 24, 2024
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 24, 2024
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
Dinamani Chennai

வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?

அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.

time-read
2 mins  |
September 24, 2024
பாரதியார் எனும் நித்தியசூரி !
Dinamani Chennai

பாரதியார் எனும் நித்தியசூரி !

மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.

time-read
3 mins  |
September 24, 2024
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
Dinamani Chennai

தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 24, 2024
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
Dinamani Chennai

ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு

நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்

time-read
1 min  |
September 24, 2024
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
Dinamani Chennai

'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'

தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 24, 2024