ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப். 25) அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி நடந்த தேர்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி (3), ரஜெளரி (3), பூஞ்ச் (5), காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் (8), பத்காம் (5), கந்தர்பால் (2) ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் புதன்கிழமை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்த வாக்காளர்கள் 25.78 லட்சம் பேர். இவர்கள் வாக்களிக்க 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. பல அடுக்கு பாதுகாப்புடன் காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பல இடங்களில் மக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது. வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
هذه القصة مأخوذة من طبعة September 26, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 26, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
லெபனான் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
ஹிஸ்புல் லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல், அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கான்பூர் டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிக் கொடி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.
கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை: ராணுவ தலைமைத் தளபதி
கிழக்கு லடாக் எல்லையில் இயல்பான சூழல் நிலவவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
பொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்
‘பொய் வாக்குறுதிகள் மட்டுமே காங்கிரஸின் அரசியல்; அதேநேரம், கடின உழைப்பு மற்றும் தீா்வு சாா்ந்த அரசியலை பாஜக முன்னெடுக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடி எப்படி செலவிடப்பட்டது?
மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 1.17 லட்சம் கோடியை மேற்கு வங்க அரசு எந்தெந்த பணிகளுக்காக, எப்படி செலவிட்டது என்பது குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் வலியுறுத்தியுள்ளார்.
பழனி மலைக் கோயில் ராஜகோபுர சுதை வளைவு சேதம்
பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் சுதை வளைவு சேதமடைந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
ஜமைக்கா ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி
ஜமைக்கா ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு, அவா்களின் திறன் கட்டமைப்புக்கு இந்தியா பங்காற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரஜினிகாந்துக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை
ரத்த நாள வீக்க பாதிப்புக்குள்ளான நடிகா் ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டதாகவும், அவா் இரு நாள்களில் வீடு திரும்புவாா் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் பொறுப்பேற்பு
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. விஜயகுமார் பொறுப்பேற்றார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்க மறுக்கக் கூடாது
ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிா்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.