முன்னதாக வங்கதேசத்தை 233 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்திய அணி, தனது இன்னிங்ஸில் அதிரடி விளாசலோடு 52 ரன்களே முன்னிலை பெற்று முடித்துக் கொண்டது. மழையால் பாதிக்கப்பட்ட கான்பூா் டெஸ்ட்டில் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, வெற்றிக் கனியை பறிக்கும் முனைப்புடன் வியூகம் அமைத்து விளையாடி வருகிறது இந்தியா.
கடந்த 27-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் வங்கதேசம், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் சோ்த்த நிலையில், மழை காரணமாக 2, 3-ஆவது நாள் ஆட்டங்கள் கைவிடப்பட்டன. இந்நிலையில், 4-ஆவது நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை மோமினுல் ஹக், முஷ்ஃபிகா் ரஹிம் தொடா்ந்தனா். ரஹிம் 2 பவுண்டரிகளுடன் 11, தொடா்ந்து வந்த லிட்டன் தாஸ் 3 பவுண்டரிகளுடன் 13, ஷகிப் அல் ஹசன் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத நிலையிலும், மோமினுல் ஹக் நிதானமான ஆட்டத்தை தொடா்ந்து சதத்தை எட்டினாா். மறுபுறம், தைஜுல் இஸ்லாம் 1 பவுண்டரியுடன் 5, ஹசன் மஹ்முத் 1, காலித் அகமது 0 ரன்களுக்கு வீழ, வங்கதேசத்தின் ஆட்டம் 233 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3, சிராஜ், அஸ்வின், ஆகாஷ்தீப் ஆகியோா் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் எடுத்தனா்.
ஆரம்பம் முதல் அதிரடி
இதையடுத்து, இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சா்மா கூட்டணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசினாா். வேகப்பந்துவீச்சு எடுபடாத நிலையில், சுழற்பந்துவீச்சாளரான மெஹிதி ஹசன் மிராஸை களமிறக்கினாா் வங்கதேச கேப்டன் ஷான்டோ.
هذه القصة مأخوذة من طبعة October 01, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 01, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம்
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாடு சாத்தியம் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் அந்த அணி, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.
மேலும் ஓர் அமெரிக்க ட்ரோன் அழிப்பு: ஹூதிக்கள்
அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பர் ரகத்தை (படம்) சேர்ந்த மேலும் ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது யேமனின் ஹூதி கிளர்ச்சி யாளர்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் உத்தரவு
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இலக்கு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நிகழ் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது இலக்கு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
வேறு சிறப்பு நீதிபதியிடம் செந்தில் பாலாஜி வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எம்.பி. எம்எல்ஏகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை வேறு சிறப்பு நீதிபதியிடம் ஒப்படைப்பது தொடா்பாக நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
'தொழிலதிபர்களுக்காக ஆட்சி நடத்தும் பாஜக'- ராகுல் குற்றச்சாட்டு
மத்தியில் தற்போதைய பாஜக அரசு தொழிலதிபா்களுக்கான ஆட்சியை நடத்தி வருவதாகவும் எளிய மக்கள் போராடி வரும் நிலையில் பெரும் பணக்காரா்களிடம் செல்வம் குவிந்து வருவதாகவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூர் விவகாரத்தில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்
'மணிப்பூர், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற தீவிரமான விஷயங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்' என்று காங் கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
பிரதமர் குறித்த கார்கே கருத்து அவமானகரமானது
பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங் கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன் கார்கே தெரிவித்த கருத்து தரம் தாழ்ந்ததும் அவமானகரமானதும் ஆகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
பட்டியலின மாணவருக்கு ஐஐடியில் இடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.17,500 செலுத்தாததால் வாய்ப்பை இழந்த விவகாரம்