“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு"-குறள் பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்தரும் நீர் நிறைந்த ஊருணி எல்லாருக்கும் பொதுவாவதுபோல் பொதுவாகும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
மாநிலத்தில் எந்தவொரு நபரும் பட்டினியின்றி இருப்பதை உறுதி செய்வதே அரசின் கொள்கையாகும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பு இலக்கினை அடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக ஏழை மற்றும் விளிம்பு நிலைக்குடிமக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை வழங்குவதே தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசு தரமான உணவு தானியம் கொள்முதல் செய்தல் பாதுகாப்பான முறையில் சேமித்தல், உரிய பயனாளிக்கு முறையான அங்கீகாரத்திற்குப் பின்பு விநியோகம் செய்தல் உள்ளிட்ட அம்சங்களுடன் தனது உணவுக் கொள்கையினை வகுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 142 புதிய நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் அதிகம் பயனடையக் கூடிய அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கக் கூடிய அரிசி, பருப்பு,சாக்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
هذه القصة مأخوذة من طبعة July 11, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 11, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு 12ந்தேதி தொடக்கம்
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதில், பெரும்பாலானோர் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோ மீட்டர், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
வைஸ்யா கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழா
சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கார்களுக்கான உரிமை அனுபவத்தை மேம்படுத்த கேர்' திட்டம், டொயோட்டா அறிமுகம்
பல்வேறு புதிய முயற்சிகள், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்வதில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உரிமை அனுபவத்தை வழங்கும் வகையில் 'டி கேர்' என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு-அரசு கல்லூரியில் 127 பேர் சேர்ந்தனர்: சென்டாக் சேர்க்கை பட்டியல் வெளியீடு
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் 127 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
‘ராட்சசன்' பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய மந்திரிக்கு முதல்வர் கடிதம்
3 நாட்களுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை
சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.