கல்விக் கண் திறந்த காமராசர் பிறந்த நாள் என்று அந்த நாளுக்குப் பெயர். அரசின் சார்பிலேயே நாடு முழுவதும் நடத்தப்படுகிறது இவ்விழா.
அது என்ன கல்விக் கண் திறந்த காமராசர்? அப்படியானால் காமராசர் திறந்து வைப்பதற்கு முன் நமக்கு கல்விக் கண் இல்லையா நமது முன்னோர்கள் எல்லாம் கல்வி பெறாத அறிவுக் குருடர்களாகவா இருந்தனர்?
அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாது. மெட்ரி குலேசன், சிபிஎஸ்சி கேந்திர வித்யாலயா, வோர்ல்டு ஸ்கூல், ப்ளேஸ்கூல் என்று பல்கிப் பெருகியிருக்கிற இன்றைய கல்விக் கூடங்களுக்குள் சென்று திரும்புகிற நமது பிள்ளைகளிடம் மேற்கண்டவாறு கேள்விகள் எழுவது இயல்புதான்.
இது 2024; காமராசருக்கு 121 வயது ஆகிறது. அவர் மறைந்தே 40 ஆண்டுகள் உருண்டோடிப் போய்விட்டன. ஆக இன்றைய இளம் தலைமுறையிடம் கேள்விகள் எதிர்மறையாய் எழ வாய்ப்புள்ளது. அதனாலேயே அந்தக் கேள்விகளுக்கு விடை கூறுவதற்காகவே 2006-2011 காலகட்டத்தில் பொறுப்பிலிருந்த அன்றைய அரசு, பள்ளிகளில் இந்த விழாவைக் கொண்டாடச் செய்திருக்கிறது. வழக்கம்போல் தலைவர்களின் பிறந்த நாட்களுக்கு வழங்கப்படுவது போல் விடுப்பை அறிவித்திருந்தால் அது பிள்ளைகளுக்கு வெறும் மகிழ்ச்சியான நாள் அவ்வளவுதான். மாறாக, ஜூலை 15 ஆம் நாளை விழா எடுக்கவைப்பதன் மூலமாகத்தான் காமராசரின் உழைப்பை, சிந்தனையை, அதன் விளைவை வளரும் தலைமுறைப் பிள்ளைகளிடம் விதைக்க முடியும் என்று கருதியிருக்கிறது அன்றைய அரசு.
ஆனால், எதார்த்தத்தில் சுதந்திரம் என்பது மிட்டாய் தின்கிற நாள் என்பதைப் போல காமராசர் பிறந்த நாளும் பெரிதாக கருத்துப் பரப்பலோ, புரிதலோ இல்லாமல்தான் போகிறது. இந்த இடைவெளியை சரி செய்ய வேண்டும் என்கிற முயற்சியாகவே இந்த கட்டுரையை வழங்குகிறது தங்க மங்கை. மேலும் தமிழ்நாட்டிலிருக்கிற அனைத்துக் கல்வி நிலையங்களிலும் காமராசர் படம் கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும் பெரிதாக இருக்க வேண்டும். கல்வி நிலைய நூலகங்களில் காமராசர் பற்றிய நூல்கள் மாணவர்களின் வாசிப்பிற்கு வைக்கப்பட வேண்டும். கல்வி வளர்ச்சி நாளில் காமராசரின் அரும் பெரும் பணிகளை மாணவர்களுக்கு விளக்கிடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை எல்லாம் முன்வைப்பதும் நமது நோக்கமாக இருக்கிறது.
கல்வி கல்லாதவரின் முகத்திலிருப்பவை கண்கள் அல்ல, அவை புண்கள் என்றார் திருவள்ளுவர்.
هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai July 2024 من Thangamangai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai July 2024 من Thangamangai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.
சம்பள உயர்வு
நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.
தாயுள்ளம்
அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.