மொசக்கறி
Andhimazhai|June 2024
கார்த்திகை கை மாத பனி கொட்டிக்கொண்டிருந்தது.
சிவசெல்வி செல்லமுத்து
மொசக்கறி

கார்த்திகை மாத பனி கொட்டிக்கொண்டிருந்தது. ஊருக்குள் ஓரிரு தாட்டோடு வீடுகளும் அப்பொழுதுதான் காரை வீடுகளாக மாறிக்கொண்டிருந்த காலம். சனம் மொத்தமும் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தது. அந்தப் பனியிலும் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு ராசுக்குட்டி திண்ணையில் படுத்திருந்தான். நெஞ்சு வரை கம்பளியைப் போர்த்தியிருந்தான். தூக்கம் வராமல் கண்களை உருட்டி உருட்டி கூரையை வெறித்துக் கொண்டிருந்தான்.

ராசுக்குட்டியின் சிறிய குடுசு ஊர்க் கோடியில் இருந்தது. பனை ஓலைகளைக் கொண்டு நேர்த்தியாக மேயப்பட்டிருக்கும்.  வழக்கமாக ராசுவும் ஆத்தாளும்தான் குடுசுக்குள் படுத்துக்கொள்வார்கள். அய்யன் வெளியே திண்ணையில் படுப்பார். ஆனால் இப்போதெல்லாம் அய்யன்  தளர்ந்துவிட்டார். கண்ணும் சரியாகத் தெரிவதில்லை. அதனால் ராசுக்குட்டி திண்ணைக்கு மாறிவிட்டான். அடுப்பு ஒரு மூலையிலும், ஆத்தாளும் அப்பனும் ஒரு மூலையிலும் படுத்துக்கொள்வார்கள்.

பல வருடங்களாகப் புள்ளையில்லாமல் நரம்பு தளர்த்த காலத்தில்தான் ராசுக்குட்டி பிறந்தான். ராசு வளர வளர பெத்தவர்களுக்கும் வயசாகிக்கொண்டே போனது. விவரம் தெரிய ஆரம்பித்ததும், அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவனைச் சுற்றிக்கொண்டே இருந்தது.

கம்பளியை இழுத்து தலைவரை போர்த்தியபோது, தூரத்தில் நான்கைந்து நாய்கள் குறைப்பது அவன் காதில் விழுந்தது.  நாய்களின் சத்தம் அருகில் வர வர பேச்சுச்சத்தமும் கேட்டது. பேச்சு சத்தத்தில் வாரிசுருட்டி எழுந்தான். கட்டியிருந்த அரைக் காவேட்டியை காலுக்கு நடுவில் விட்டு, பின்னால் இழுத்து இறுக்கமாகச் சொருகினான். ஓடிப்போய்க் குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்தான்.

ஈட்டியோடு வெளியே வரும்போது நாயும் ஆட்களும் அருகில் வந்துகொண்டிருந்தார்கள். வேகமாய்ப் போய் ஈட்டியோடு இட்டேரியில் நின்றுகொண்டான். தீப்பந்தம் நகரும் வேகத்திலிருந்து, வருபவர்கள் ஓட்டமும் நடையுமாக வருவதைக் கணித்தான். அந்த வெளிச்சத்தில், மூன்று நீட்டுபோக்கான நாய்கள் ஆக்ரோஷத்துடன் வருவதும், அவற்றைப் பிடித்திருந்த மூன்று பேரையும் அவை தரதரவென்று இழுத்துவருவதும் தெளிவாகத் தெரிந்தது.

இவனருகில் வந்ததும் ஆட்கள் இழுத்துப்பிடித்து நாய்களை நிறுத்தினார்கள். இரண்டு செவலையும்,  கருநாயும் நாக்கை தொங்கபோட்டவாறு எச்சை ஒழுக நின்றது.

Diese Geschichte stammt aus der June 2024-Ausgabe von Andhimazhai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 2024-Ausgabe von Andhimazhai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS ANDHIMAZHAIAlle anzeigen
வாகை சூடிய வாழை!
Andhimazhai

வாகை சூடிய வாழை!

இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.

time-read
1 min  |
September 2024
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
Andhimazhai

"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி

\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.

time-read
2 Minuten  |
September 2024
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
Andhimazhai

சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.

time-read
1 min  |
September 2024
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
Andhimazhai

புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்

புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.

time-read
1 min  |
September 2024
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
Andhimazhai

கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்

இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.

time-read
2 Minuten  |
September 2024
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
Andhimazhai

வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!

வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.

time-read
1 min  |
September 2024
அவன் மாதிரி ஒருத்தன்
Andhimazhai

அவன் மாதிரி ஒருத்தன்

கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.

time-read
1 min  |
September 2024
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
Andhimazhai

அவர் கொடுத்த விலை மிக அதிகம்!

அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.

time-read
2 Minuten  |
September 2024
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
Andhimazhai

அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்

மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.

time-read
1 min  |
September 2024
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
Andhimazhai

தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?

'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.

time-read
1 min  |
September 2024