"மூன்று வருஷத்துக்கு மேலாச்சு, எந்தக் குற்றச் சாட்டும் என் மீது இல்லை. வீசிங் இருக்கு... மாறுதல் கேட்டால் ஸ்வீட் பாக்ஸ் கேட்குறாங்க. எனக்கு அந்தளவிற்கு வசதியில்லை. இப்ப மாறுதல் செய்யப்பட்டிருக்கும் 58 நபர்களில் 90 சதவிகிதம் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து வந்திருக்கின்றார்கள்" என பல இன்ஸ்பெக்டர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜுவாலிடம் ஸ்வீட் பாக்ஸ் மாறுதல் அரசியல் குறித்து பலவிதமாகக் கொட்டித் தீர்த்திருக்கின்றனர் கோவையில்!
சமீபத்தில் கோவை சரகத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 58 இன்ஸ்பெக்டர்களை டி.ஜி.ஜி. சரவணசுந்தர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அந்த இடமாற்ற தல்கள்தான் தமிழகக் காவல்துறை மட்டத்தில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது. காவல்துறையைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றுபவர்கள், வழக்கமாக பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இவற்றில் 70 சதவிகித இடங்கள் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சரியான காரணங்களின் அடிப்படையில், அவர்கள் ஏற்கெனவே கொடுத்த கோரிக்கைக் கடிதத்தில் கேட்டிருந்தபடி, அந்த இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். மீதமுள்ள 30 சதவிகித இடங்களுக்கு அதிகாரிகள் வழக்கம்போல் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து தங்களுக்கு வேண்டப்பட்ட இடங்களுக்கு பணியிட மாறுதல் பெறுவார்கள்.
இந்த நிலையில், மேற்கு மண்டலத்திலுள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 58 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் அனைத்து பணியிடங்களுக்கு ஸ்வீட் பாக்ஸ்கள் வாங்கிக்கொண்டு தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் சாதாரணமான காவல் நிலையங்களுக்கு ரூ.5 லட்சம் வரையும், மாநில எல்லையோரமாக அமைந்துள்ள மற்றும் வருமானம் கூடுதலாக வரக்கூடிய காவல் நிலையங்களுக்கு ரூ.20 லட்சம் வரையும் கொடுத்ததாக காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபோல் ஸ்வீட் பாக்ஸ்கள் வாங்கிக் கொண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், உண்மையிலேயே மருத்துவம், குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட சரியான காரணங்களுக்காக இடமாற்றத்தால் வேண்டி காத்திருந்தவர்களுக்கு, அதிகபட்சமாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
Diese Geschichte stammt aus der September 07 - 10, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 07 - 10, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.