நெல்லையில் போர்க்களமாக மாறிய களஆய்வுக்கூட்டம் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் பயங்கர அடிதடி
Dinakaran Chennai|November 23, 2024
நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
நெல்லையில் போர்க்களமாக மாறிய களஆய்வுக்கூட்டம் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் பயங்கர அடிதடி

கும்பகோணம் கூட்டத்திலும் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் மோதி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள், ஏம்எல்ஏக்கள் பங்கேற்று வருகின்றனர். நெல்லையில் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதி கள ஆய்வு கூட்டம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.

மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வரகூர் அருணாசலம், முன்னாள் எம்எல்ஏ சிவசாமி ஆகியோர் கள ஆய்வு பணிக்காக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளரும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான பாப்புலர் முத்தையா பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட குறைந்த ஓட்டுகளே வாங்கி உள்ளோம். கடந்த வாரம் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் பல வார்டுகளில் அதிமுக நிர்வாகிகள் யாருமே இல்லை என்பதை நான் பார்த்தேன். மாவட்ட செயலாளர் சேலத்திற்கு சென்று விட்டார். அவர், வேறொரு நாளில் சேலத்திற்கு சென்று இருக்கலாம். பூத் கமிட்டிக்கு 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வாக்காளர் சேர்ப்பு முகாமில் யாருமே இல்லாதது வருந்தத்தக்கது என்று பேசினார்.

இவ்வாறு அவர் பேசியதும், மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து பாப்புலர் முத்தையாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அமமுகவிற்கு சென்று வந்தவர்கள் எல்லாம் பேசுவதற்கு அருகதை கிடையாது என்று கூறினர். இதனால் பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும், மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கூட்டம் போர்க்களம் போல் காட்சியளித்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் மோதலை பார்த்து அதிர்ச்சியடைந்த மாஜி அமைச்சர் வேலுமணி, தகராறு செய்பவர்கள் வெளியே செல்லலாம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைக்கில் எச்சரிக்கை விடுத்தார்.

Diese Geschichte stammt aus der November 23, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 23, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு
Dinakaran Chennai

திருவொற்றியூர் பகுதியில் மின் புதைவட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வாரியத்தில் மனு

திருவொற்றியூர், மணலி பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் புதைவடமாக மாற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

பாமாயில் விலை உயர்வு

விருதுநகர் மார்க்கெட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, பாமாயில் கடந்த வாரம் ரூ.2,130க்கு விற்கப்பட்டது.

time-read
1 min  |
February 17, 2025
மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை
Dinakaran Chennai

மீண்டும் மொழிப்போரை உருவாக்க வேண்டாம் வேல்முருகன் எச்சரிக்கை

திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மும்மொழி கொள்கை மோசடி, ஏமாற்றும் கொள்கை. தாய்மொழி கொள்கை தான் உலகத்தில் தலை சிறந்த கொள்கை.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

பட்டியல் சமூக மாணவியை காலில் விழ வைத்து கொடுமை

கோவில்பட்டியில் மாணவியை சக மாணவி காலில் விழ வைத்த தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

ஓ காட் பியூட்டிஃபுல் டைட்டில் டீசர் ரிலீஸ்

பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’.

time-read
1 min  |
February 17, 2025
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி
Dinakaran Chennai

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது வரியை வாங்கிட்டு நிதி கொடுக்க மறுப்பதா? - ஒன்றிய அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று அவிநாசியில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 17, 2025
விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு
Dinakaran Chennai

விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு

கர்நாடக மாநிலம் பெருங்களூருவைச் சேர்ந்தவர் சுமன் அஸ்வின் (22). இவர், 3ம் ஆண்டு பொறியியல் பட்டய கல்வி படித்து வருகிறார்.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் இலவச மருத்துவ முகாம்

திருவள்ளூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தொழுநோயாளிகளுக்கு கால் புண்ணுக்கு சிகிச்சை அளித்ததுடன், 40 பேருக்கு கட்டு கட்டும் வகையில் சுய பாதுகாப்பு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டன.

time-read
1 min  |
February 17, 2025
துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி
Dinakaran Chennai

துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி

துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையைச் சேர்ந்த தந்தை – மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

time-read
1 min  |
February 17, 2025
Dinakaran Chennai

நிதி கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம் - ஒன்றிய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

நிதி உரிமையை கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்பதா? என்றும், தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என்றும் ஒன்றிய அரசை உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025