இம்மசோதாவை தாக்கல் செய்வதற்காக அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 3ல் 2 பங்கு பலம் கிடைக்காததால் ஆளும்தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மசோதா மீது விசாரணை நடத்த, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும், யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் மசோதாக்களுக்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த 12ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், அரசியலமைப்பு 129வது சட்ட திருத்தம் மற்றும் யூனியன் பிரதேசம் சட்ட திருத்த மசோதாக்களை மக்களவையில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் செலவுகள் குறைவதோடு, தேர்தல் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது தடுக்கப்படும், வளர்ச்சித் திட்டப் பணிகளும் தொய்வின்றி நடைபெறும் என ஒன்றிய அரசு கூறுகிறது.
ஆனால் இந்த திட்டம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனால் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான 2 மசோதாக்களை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களை தாக்கல் செய்யவே கூடாது என எதிர்க்கட்சிகள் தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
Diese Geschichte stammt aus der December 18, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 18, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வீராணம் பிரதான குழாய் பழுது சீரமைப்பு
வண்டலூர்-கேளாம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் வீராணம் குழாயில் ஏற்பட்ட குழாய் பழுது சீரமைக்கப்பட்டது.

ஹேம்குண்ட், கேதார்நாத்துக்கு |இனி ரோப்காரில் செல்லலாம்
உத்தர காண்டில் உள்ள புனித தலங்களான கேதார்நாத், ஹேம்குண்ட் சாகிபுக்கு யாத்திரை செல்ல மலையில் ரோப்கார் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் கேதார்நாத் செல்ல 9 மணி நேரமாகும் பயணம் வெறும் 36 நிமிடமாக குறையும்.
கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ்- பாஜ மோதல்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் நயனா மோட்டம்மா பேசும்போது, 'மாநிலத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு ₹1 வரி செலுத்தினால், மாநிலத்துக்கு 15 பைசாவுக்கும் குறைவான வரிப் பங்குதான் வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ தளம் மீது இரட்டை தற்கொலை படை தாக்குதல்
பெஷாவர், மார்ச் 6: பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் பலியாகினர்.

பீட்டர் மாமா
தலைமையை மாற்றும் விஷயத்தில் தாமரைக் கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பை பற்றி சொல்கிறார் wikiயானந்தா

19 மண்டலங்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்க்க, நீக்க 8ம் தேதி சிறப்பு முகாம்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்க்க, நீக்க சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் 8ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஒடிசாவில் இருந்து கொச்சிக்கு வந்து டீ கடையில் வேலை பார்த்தபடி மோகன்லாலுடன் நடித்த வாலிபர்
கொச்சி, மார்ச் 6: ஒடிசா வாலிபர் ஒருவர் கொச்சிக்கு வந்து டீ கடையில் வேலை செய்து வந்தார்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் போராடும்: ராகுல் காந்தி
சுமை தூக்கும் தொழிலாளர்களாக காங்கிரசார் ஈடுபட்டனர் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து
வில்லியம்சன், ரவீந்திரா சதம்

ஒரு நாள் வருவாய் மட்டும் ₹52 ஆயிரம் மகாகும்பமேளாவில் ₹30 கோடி சம்பாதித்த படகோட்டி குடும்பம்
மகாகும்பமேளாவில் ஒரு படகோட்டி குடும்பம் மட்டும் ரூ.30 கோடி சம்பாதித்ததாக உ.பி. முதல்வர் யோகி தெரிவித்தார்.