புது டில்லி ஜூலை 10: நாட்டில் தாமதமாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தற்போது பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. முக்கியமாக, கேரளம், கா்நாடகம், வடமாநிலங்களான தில்லி, ஹிமாசல், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால், யமுனை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
37 பேர் உயிரிழப்பு: வடமாநிலங்களில் கடந்த இரு நாள்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஹிமாசலில் 18 பேரும், பஞ்சாப், ஹரியாணாவில் 9 பேரும், ராஜஸ்தானில் 7 பேரும், உத்தரபிரதேசத்தில் மூவரும் அடங்குவர்.
பிரதமா் ஆலோசனை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, மூத்த அமைச்சா்கள், மத்திய அரசின் உயரதிகாரிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா்.
பருவமழை சூழலைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அவா்களிடம் பிரதமா் மோடி வலியுறுத்தியதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூா் அதிகாரிகள், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்டோா் பருவமழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரண உதவிகளை விரைந்து வழங்கி வருவதாகவும் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Diese Geschichte stammt aus der July 11, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 11, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு
நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன்
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.