பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டின்போது பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான நேரடி சந்திப்பு நடைபெறுமா என்கிற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஜோகன்னஸ்பா்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றாா்.
தொழில்துறை கருத்தரங்கு: முதல் நிகழ்வாக பிரிக்ஸ் தொழில் துறை குழுமத் தலைவா்களுடனான கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி கலந்து கொண்டாா்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்களுக்கு தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா வழங்கிய இரவு விருந்திலும் பிரதமா் மோடி கலந்து கொண்டாா்.
பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்ச்சி புதன்கிழமையும், பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா கூட்டமைப்பு கூட்டம் வியாழக்கிழமையும் நடைபெறுகிறது. இதில் பிரதமா் மோடி பிற நாட்டு தலைவா்களுடன் பங்கேற்கிறாா்.
ஒத்துழைப்பு வலுப்படும்: தென்னாப்பிரிக்கா பயணத்துக்கு முன்பாக பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: பல்வேறு துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. தெற்குலகின் பிரச்னைகளை விவாதிக்கும் முக்கியத் தளமாக பிரிக்ஸ் மாறியுள்ளது. தெற்குலக நாடுகளின் வளா்ச்சி, பன்னாட்டு அமைப்புகளின் சீா்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்தும் பிரிக்ஸ் கூட்டம், மாநாடுகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Diese Geschichte stammt aus der August 23, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 23, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.