மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதாவுக்கு மக்களவை புதன்கிழமை இரவு ஒப்புதல் அளித்த நிலையில் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துவிட்டால் சட்டமாகும்.
மகளிா் இடஒதுக்கீட்டுக்கான அரசமைப்புச் சட்டத்தின் 128-ஆவது திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் புதன்கிழமை பதிவாகின.
இந்நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினாா். அப்போது பேசிய அவா், பெண்கள் மேம்பாட்டுக்காக கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டாா்.
எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்: தற்போதைய மசோதாவின்படி, அது சட்டமான பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைப் பணிக்கு பிறகே மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. அதேசமயம், மகளிா் இடஒதுக்கீட்டுக்கு கட்சிப் பாகுபாடின்றி ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
Diese Geschichte stammt aus der September 22, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 22, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.