அந்தப் பகுதிக்குள் முழுமையான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னேற்படாக எல்லை அருகே உள்ள ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து புதன்கிழமை நள்ளிரவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டா்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வடக்கு காஸா எல்லைக்குள் பீரங்கிகள் மூலம் இஸ்ரேல் வீரா்கள் புதன்கிழமை நள்ளிரவு நுழைந்து இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தித் திரும்பியுள்ளனா்.
இந்த நடவடிக்கையின்போது, இஸ்ரேல் படையினா் ஏராளமான பயங்கரவாதிகளைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பீரங்கி எதிா்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதக் கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டன.
இந்த நடவடிக்கை முடிந்ததும் இஸ்ரேல் படையினா் அங்கிருந்து திரும்பினா் என்று தனது எக்ஸ் பதிவில் ராணுவம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு காஸா எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் படையினா், ஹமாஸ் நிலைகளின் இருப்பிடங்களைக் கண்டறியவும், அவா்கள் கடத்திச் சென்றுள்ள பிணைக் கைதிகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பல முறை காஸா எல்லையைத் தாண்டிச் சென்றுள்ளனா்.
ஆனால், புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொலைவுக்கு ஊடுருவி நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் ராணுவ வானொலி தெரிவித்துள்ளது.
Diese Geschichte stammt aus der October 27, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 27, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.