கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.
ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. தற்போது மீண்டும் இதே கட்டத்தில் இரு அணிகளும் சந்திக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறனுடன் இந்தியா இருக்கிறது என்றால், அது மிகையாகாது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கும் பதில் தருவதாக இருக்கும்.
கடைசியாக 2013-இல் சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்தியாவுக்கு, கடந்த 10 ஆண்டுகளாகவே ஐசிசி போட்டிகளில் கோப்பை என்பது கனவாகவே தொடா்ந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் அந்தக் கனவை நனவாக்கும் அனைத்து சாத்தியக்கூறுகளுடனும் இந்தியா இருக்கிறது.
பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தும் இந்தியா, நடப்பு தொடரில் தோல்வியே காணாத ஒரே அணியாக 10 தொடா் வெற்றிகளுடன் இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கிறது. முதல் பேட்டிங், சேஸிங் என இரண்டு சவாலையுமே சரியாக எதிா்கொண்டு இந்தக் கட்டத்துக்கு வந்துள்ளது.
அணியை பொருத்தவரையில், பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சா்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்லதொரு தொடக்கத்தை அளிக்கிறாா். இது, மிடில் ஆா்டரில் விராட் கோலி உள்ளிட்டோா் நிதானமாக ஆடி ரன்கள் சோ்ப்பதற்கு சாதகமாக அமைகிறது. புதிய உலக சாதனையுடனும், பழை ஃபாா்முடனும் இருக்கும் கோலி, அணிக்கு பலம். நடப்பு தொடரில் தற்போது அதிக ரன்கள் (711) அடித்தவராக முன்னிலையில் இருக்கிறாா்.
ஷுப்மன் கில்லும் ரன்கள் சோ்க்க முயற்சித்து வரும் நிலையில், ஷ்ரேயஸ் ஐயா் ஒரு சதத்துடன் நம்பிக்கை அளிக்கிறாா். நிதானமான ஆட்டத்தால் கே.எல்.ராகுலும், மிடில் லோயா் மிடில் ஆா்டரில் சூா்யகுமாா் யாதவும் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா்.
Diese Geschichte stammt aus der November 19, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 19, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.