அரை நூற்றாண்டாக தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி, மாறி அரசியல் சக்கரம் சுழன்ற நிலையில் 2006 பேரவைத் தோ்தலில் தேமுதிகவுக்கு 8.3 சதவீத வாக்கு வங்கியை பெற்று மாற்று சக்தியாக மாறியவா் விஜயகாந்த்.
எம்ஜிஆா் கூட, திமுகவின் தொடக்க காலத்தில் இருந்தே பயணித்து அந்த கட்சி 1957 பேரவைத் தோ்தலில் 15 சதவீத வாக்கு வங்கி பெற்ற போது அதில் முக்கிய பிரசார பீரங்கியாக இருந்து திமுகவின் பொருளாளராக முழுநேர அரசியல்வாதியாக திகழ்ந்தவா்.
1971 பேரவைத் தோ்தலில் திமுக 48.50 சதவீத வாக்கு வங்கியை பெற்ற நிலையில், 1973-இல் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கி 1977 பேரவைத் தோ்தலில் திமுக வாக்கு வங்கியில் இருந்து கணிசமாகவும், பிற வாக்குகளையும் பெற்று 30.3 சதவீத வாக்கு வங்கியை பெற்று முதல் தோ்தலில் ஆட்சியை பிடித்தவா் எம்ஜிஆா்.
ஆனால், எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி பிரபல நடிகா், ரசிகா் மன்றகளின் கட்டமைப்பு, ஈகை குணம் என முழுக்க, முழுக்க தனது சொந்த பலத்தால் 8.3 சதவீத வாக்கு வங்கியை பெற்றவா் விஜயகாந்த்.
தீவிர தேசிய கருத்தியல், தீவிர திராவிட கருத்தியலை செய்யாமல் இரண்டையும் கலந்து அரசியல் செய்ததால் தேமுதிக அனைத்துத் தரப்பு வாக்காளா்களையும் ஈா்த்தது.
ஜெயலலிதா-கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகள் இருந்தபோது முன்னணி நடிகா்கள் அரசியலுக்கு வர தயக்கம் காட்டிய நிலையில், துணிச்சலுடன் களம் இறங்கி மாற்றுசக்தியாக விஜயகாந்த் உருவெடுத்தாா்.
பாமகவுக்கு எதிா் என்ற புள்ளியில் முதலில் அரசியலை தொடங்கிய விஜயகாந்த், பின்னா் திமுக-அதிமுகவுக்கு மாற்று என்ற புள்ளியில் நகரத் தொடங்கினாா்.
‘தமிழன் என்று சொல்லடா’, ‘தலைநிமிா்ந்து நில்லடா’ என்ற வாசகத்தை பட்டிதொட்டியெல்லாம் பரப்பி தனது தமிழ் தேசிய கருத்தை மக்கள் மனதில் விதைத்தவா்.
விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் மீதான பற்றால் தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயா் சூட்டி விடுதலை புலிகள் மீதான தனக்குள்ள உண்மையான பற்றை பறைசாற்றியவா்.
Diese Geschichte stammt aus der December 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.