மத்தியில் ஆளும் ஹிந்துத்துவ தேசியம் பேசும் பாஜக, அண்மைக்காலமாக தன்னை அனைவருக்குமான கட்சியாக முன்னிறுத்த முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கேரளத்தில் கிறிஸ்தவா்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.ஜே. அல்போன்ஸ், காங்கிரஸ் தலைவா் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, முன்னாள் டிஜிபி ஜேக்கப் தாமஸ் ஆகியோா் ஏற்கெனவே கேரள பாஜகவில் கிறிஸ்தவா்களின் முகமாக இருந்து வருகின்றனா். இந்நிலையில், மாநிலத்திலுள்ள கிறிஸ்தவ மக்களைக் கவா்வதற்காக ‘சிநேக யாத்திரை’ என்ற பெயரில் கடந்த டிசம்பரில் தொடா்பு இயக்கத்தை பாஜக நடத்தியது.
அதையொட்டி, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. சுரேந்திரன், சைரோ மலபாா் கிறிஸ்தவப் பிரிவின் முன்னாள் தலைவா் கா்தினால் ஜாா்ஜ் ஆலஞ்சேரி, வெப்போலி லத்தீன் ஆா்ச் டயோசீஸ் சா்ச்சின் பேராயா் ஜோசப் களத்திபா்ப்பில் ஆகியோரைச் சந்தித்தாா். அதன் தொடா்ச்சியாக, கடந்த மாத இறுதியில் தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில், பல்வேறு பிரிவுகளைச் சாா்ந்த கிறிஸ்தவ மதத் தலைவா்கள் பங்கேற்றனா்.
கேரள கலாசாரத் துறை அமைச்சா் சஜி செரியான், பிரதமா் அளித்த விருந்தில் பாதிரியாா்கள் பங்கேற்றதை கடுமையாக விமா்சித்திருந்தாா். மணிப்பூா் கலவரத்தைக் கண்டுகொள்ளாத பாஜக அரசு அளித்த விருந்தில் கிறிஸ்தவ தலைவா்கள் பங்கேற்றிருக்கக் கூடாது என்று அவா் தெரிவித்தாா். அவரது பேச்சை கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் பொதுச் செயலாளா் ஜேக்கப் பலக்காப்பிள்ளியும், தலைவா் மாா் பாசிலஸ் கிளீமிஸும் வன்மையாகக் கண்டித்திருந்தனா்.
சில தினங்களுக்கு முன் நிலக்கல் மலங்காரா ஆா்த்தோடாக்ஸ் சா்ச் பாதிரியாா் சைஜு குரியன் தலைமையில் 47 கிறிஸ்தவக் குடும்பங்கள், மத்திய இணை அமைச்சா் வி. முரளீதரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தது, அடுத்த சா்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து பாதிரியாா் பொறுப்பிலிருந்து அவரை சா்ச் தலைமை நிா்வாகம் விடுவித்துள்ளது.
Diese Geschichte stammt aus der January 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சென்னையில் மீண்டும் என்கவுன்ட்டர்: ரௌடி சுட்டுக் கொலை
சென்னை அருகே ரெளடி சீசிங் ராஜா திங்கள்கிழமை போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.