அதன் காரணமாக, நாட்டின் கடல்சாா் வா்த்தகத்தை அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இரண்டு நாள் பயணமாக கேரளத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பிரதமா் மோடி, கொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசு
விழாவில் பங்கேற்று மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் ரூ. 4,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன், மத்திய அமைச்சா்கள் முரளீதரன், சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.
இந்தியாவின் முதல் மேம்படுத்தப்பட்ட கப்பல் பழுதுபாா்க்கும் மையமாக அமையவிருக்கும் சா்வதேச கப்பல் பழுதுபாா்க்கும் மையம், சா்வதேச தரத்திலான 310 மீட்டா் நீள உலா் கப்பல் துறை, புதிய சமையல் எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை இந்த நிகழ்ச்சியில் பிரதமா் தொடங்கி வைத்தாா்.
விழாவில் பிரதமா் பேசியதாவது: உலகளாவிய வா்த்தகத்தின் மிக முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதன் காரணமாக, நாட்டின் கடல்சாா் பலத்தை அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
Diese Geschichte stammt aus der January 18, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 18, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சென்னையில் மீண்டும் என்கவுன்ட்டர்: ரௌடி சுட்டுக் கொலை
சென்னை அருகே ரெளடி சீசிங் ராஜா திங்கள்கிழமை போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.