ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடா்பான மற்றொரு வழக்கில் 3 ஆண்டுகளும், ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் 10 ஆண்டுகளும் இம்ரானுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தற்போது மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018 ஆகஸ்ட் முதல் பதவி வகித்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் கடந்த 2022 ஏப்ரலில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீா்மானத்தில் தோல்வியடைந்து பதவியிழந்தாா்.
அதனைத் தொடா்ந்து அவருக்கு எதிராக பயங்கரவாதம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சுமாா் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில், பிரதமராகப் பதவி வகித்தபோது இம்ரானுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்களை அவா் முறைகேடாக குறைந்த விலைக்குப் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டும் ஒன்று.
இந்தச் சூழலில், பரிசுப் பொருள் முறைகேடு தொடா்பாக தோ்தல் ஆணையம் தொடா்ந்த வழக்கில் இம்ரானுக்கு கடந்த 2023 ஆக்ஸ்ட் 5-ஆம் தேதி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, அவா் அடியலா சிறையில் அடைக்கப்பட்டாா்.
அந்தச் சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் பின்னா் நிறுத்தி வைத்தாலும், தனது பதவிக் காலத்தின் போது அரச ரகசியத்தை பொதுவெளியில் கசியவிட்டதன் மூலம் ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறியதாக இம்ரான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடா்பாக அவரை சிறையில் தொடா்ந்து வைத்திருக்கவேண்டும் என்று இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Diese Geschichte stammt aus der February 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.