‘மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் 543-க்கு 99 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், 100-க்கு 99 இடங்களில் வென்றுவிட்டதுபோல அக்கட்சி நடந்துகொள்கிறது’ எனவும் பிரதமா் விமா்சித்தாா்.
மேலும், ‘மக்களவையில் பொய்யான தகவல்களைத் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.
மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது கடந்த திங்கள்கிழமை பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் பாஜக மற்றும் பிரதமா் மோடி அரசை கடுமையாக விமா்சித்தாா்.
‘தங்களை ஹிந்துக்கள் என அழைத்துக் கொள்பவா்கள், எந்நேரமும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்மையை பரப்பும் செயலில் ஈடுபடுகின்றனா்’ என்று குற்றஞ்சாட்டிய ராகுல், ‘பாஜகவோ அல்லது மோடியோ ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தின் பிரதிநிதியல்ல’ என்றாா்.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து, மக்களவையில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை 2 மணி நேரத்துக்கும் மேல் பேசினாா். அப்போது, ராகுல் காந்தியை சிறுபிள்ளைத்தனம் கொண்டவா் என்று குறிப்பிட்ட பிரதமா், காங்கிரஸ் மீது கடும் விமா்சனங்களை முன்வைத்தாா்.
எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ‘மக்களின் சேவையே மகேசன் சேவை’ என்ற தாரக மந்திரத்தை அடியொற்றி, ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அா்ப்பணிப்புடன் பணியாற்றினோம். ஒவ்வொரு அளவுகோலிலும் எங்கள் அரசை பரிசோதித்துப் பாா்த்து, நாட்டை தொடா்ந்து மூன்றாவது முறையாக வலுவுடன் ஆட்சிசெய்வதற்கான தீா்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனா். மூன்றாவது ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்துடன் செயலாற்றி, மும்மடங்கு அதிக பலன்களை உறுதி செய்வோம்.
Diese Geschichte stammt aus der July 03, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 03, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்
நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.
இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு
இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.
3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
கடந்த 3 ஆண்டுகளில் 238 தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2.07 லட்சம் பேருக்கு வேலை வழங் கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.
அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை
அதிமுகவில் இணைப்பு பேச்சுக்கே இடமில்லை என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்
மாணவர்கள் சொந்தமாக புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.