அரசமைப்புச் சட்டத்தின் எதிரி காங்கிரஸ் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி
Dinamani Chennai|July 04, 2024
அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்’ என்று மாநிலங்களவையில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
அரசமைப்புச் சட்டத்தின் எதிரி காங்கிரஸ் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மேலும், ‘ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளுக்கு முழுச் சுதந்திரம் அளித்துள்ளேன்; ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது’ என்றும் அவா் தெரிவித்தாா்.

தங்களைக் குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து, பிரதமா் மோடி புதன்கிழமை பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே, சமீபத்திய மக்களவைத் தோ்தலில் முக்கிய அம்சமாக இருந்ததென எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. அது தவறானது.

நாட்டில் அவசரநிலை பிரகடனத்துக்குப் பிறகு கடந்த 1977-இல் நடந்த மக்களவைத் தோ்தல்தான், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. உலகிலேயே இதைவிட வேதனை நிறைந்த தோ்தல் வேறெதுவும் இருக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற வேட்கை மக்கள் மனதில் இருந்ததால், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசை தூக்கியெறிந்தனா்.

சமீபத்திய மக்களவைத் தோ்தலில், அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து நாட்டு மக்களை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்தின. ஆனால், அவா்களின் அரசியலை நிராகரித்த மக்கள், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் எங்கள் மீதே அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தினா். நாட்டை மூன்றாவது முறையாக ஆளும் தீா்ப்பை எங்களுக்கு வழங்கினா். மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை தற்சாா்பு தேசமாக மாற்றுவோம்.

அரசமைப்புச் சட்டத்துக்கு ‘சீா்கேடு’: அவசரநிலை காலகட்டத்தில் மக்களவையின் பதவிக் காலத்தை ஏழு ஆண்டுகளாக நீட்டித்தது, தங்கள் ஆட்சியில் ‘தேசிய ஆலோசனைக் குழுவை’ அமைத்தது என அரசமைப்புச் சட்டத்துக்கு சீா்கேடுகளை ஏற்படுத்தியது காங்கிரஸ்.

அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைவிட ஒரேயொரு குடும்பத்துக்கே அக்கட்சி முன்னுரிமை அளிக்கிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்தான்.

அவசரநிலையின்போது பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் காங்கிரஸுடன் இப்போது கூட்டணி வைத்துள்ளன. இக்கூட்டணி, அரசமைப்புச் சட்ட மாண்புகள் மீதான உண்மையான அக்கறையில் பிறந்ததல்ல; சந்தா்ப்பவாத அடிப்படையில் ஏற்பட்டது.

Diese Geschichte stammt aus der July 04, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 04, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
நகைக் கடன் பெற கட்டுப்பாடு; வைகோ கண்டனம்
Dinamani Chennai

நகைக் கடன் பெற கட்டுப்பாடு; வைகோ கண்டனம்

வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 26, 2025
அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
Dinamani Chennai

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
February 26, 2025
பழைய ஓய்வூதியத் திட்டம்; ராமதாஸ் வலியுறுத்தல்
Dinamani Chennai

பழைய ஓய்வூதியத் திட்டம்; ராமதாஸ் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை

கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் நுண் துளை வாயிலாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை கிளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

time-read
1 min  |
February 26, 2025
இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை
Dinamani Chennai

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை

சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

இருமுறை சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு: வரைவு விதிகளுக்கு ஒப்புதல்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது
Dinamani Chennai

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 26, 2025
தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை
Dinamani Chennai

தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை

உலக தற்காப்புக் கலை வரலாற்றில் சென்னை பள்ளி மாணவிகள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

time-read
1 min  |
February 26, 2025
டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலம்
Dinamani Chennai

டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலம்

சென்னையில் டைடல் பூங்கா சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
February 26, 2025