ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அதற்குக் காரணம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண், மகளிர் உரிமைத்திட்டம் என பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களின் முன்னேற்றத்துக்கும், எதிர்காலத்துக்கும் முதல்வராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பை வழங்கிய தற்காகத்தான்.
பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியைப் போக்க முடிவு செய்து உருவாக்கியதுதான் காலை உணவுத் திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தைகூட பசியுடன் பள்ளியில் தவிக்கக் கூடாது என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன்.
தற்போது காமராஜரின் பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளேன்.18.50 லட்சம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், இனி அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2.23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயன்பெறுவார்கள். இத்திட்டம் மூலம் மொத்தம் 20.73 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுவையான காலை உணவு சாப்பிடுவார்கள்.
புறநானூறு, திருக்குறள், மணி மேகலை என்று நம்முடைய இலக்கியங்கள் மட்டுமல்ல, ஒளவையார், வள்ளலார் போன்ற சான்றோர்கள்ளும் பசிப் பிணியைப் போக்குவது பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
Diese Geschichte stammt aus der July 16, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 16, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.