இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காஸா முனையில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படையினா் இடையிலான போா் 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை 40,000-க்கும் மேலான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு போலியோ: இந்நிலையில், காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக போலி நோய் பாதிப்பு அண்மையில் கண்டறியப்பட்டது. அப்துல் ரகுமான் அபு அல்-ஜிடியான் என்ற 10 மாத குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டு அக்குழந்தையின் கால் செயலிழந்த நிலையில், அங்கு அந்த நோய்க்கான அறிகுறிகளே தென்படாமல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
செப்.9 வரை...: இதையொட்டி பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் மற்றும் ஐ.நா. சாா்பாக காஸாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதலில் மத்திய காஸா, பின்னா் தெற்கு காஸா மற்றும் வடக்கு காஸா என 3 கட்டங்களாக இந்த முகாம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு கட்டத்திலும் தொடா்ந்து 3 நாள்களுக்கு சுமாா் 8 மணி நேரம் வரை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் செப். 9-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
6.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து: காஸா முழுவதும் சுமாா் 160 இடங்களில் போலி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. சுமாா் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தின் முதல் தவணை செலுத்தப்பட்டு 4 வாரங்களான பின்னா், இரண்டாவது தவணை செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Diese Geschichte stammt aus der September 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.