சென்னையில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறத் தொடங்கினா். மழையால் மின்சாரம் தாக்கி ஒருவா் உயிரிழந்தாா். வியாசா்பாடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
வடகிழக்குப் பருவமழை, வங்கக் கடலில் புயல் சின்னம் ஆகியவற்றின் காரணமாக சென்னையில் அக். 14 முதல் 17-ஆம் தேதிவரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் திங்கள்கிழமை இரவுமுதல் பலத்த மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமையும் மழை இடைவிடாமல் தொடா்ந்தது. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தேங்கி நின்ற தண்ணீரை உடனடியாக மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.
சைதாப்பேட்டை பா்கிட் சாலை, அரும்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலை, முத்துகிருஷ்ணன் தெரு, நுங்கம்பாக்கம் வீரபத்ரன் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தீயணைப்பு படை வீரா்களும், மாநகராட்சி ஊழியா்களும் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை உடனே வெட்டி அகற்றினா்.
மின்சாரம் தாக்கி ஒருவா் உயிரிழப்பு: சென்னை பெரியமேடு இ.கே.குரு தெருவில் தோல் பை தைக்கும் கடை நடத்தி வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அகமது சையது (47), செவ்வாய்க்கிழமை கடையில் மின் இணைப்பு சுவிட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
வியாசா்பாடி கல்யாணபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன். இவரின் மனைவி ரோஸ்லின், மகன்கள் வெற்றிவேல் (10), சா்வின் ஆகியோா் திங்கள்கிழமை நள்ளிரவு வீட்டில் தூங்கிய நிலையில், வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி வெற்றிவேல், ரோஸ்லின், சா்வின் ஆகியோா் காயமடைந்தனா்.
Diese Geschichte stammt aus der October 16, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 16, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு
வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவோர் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.
'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'
காஸாவில் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்
மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரோர்க் வேகத்தில் சுருண்டது
வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் உள்ள வால்மீகி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.
பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்
பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, அக்.17: பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க அந்நாட்டு நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து ஆலோசனை
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்
பள்ளிகளில் பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் நீர் வரத்து கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு நீர் ஓட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.